ஞாயிறு, 3 மே, 2020

நடிகர் இர்பான் கான் தனித்துவமிக்க மனிதர் _ ஏஞ்சலினா ஜோலி புகழஞ்சலி

  வேப்துனியா :  சில தினங்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் புற்றுநோயின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது
மறைவுக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள் ,உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி இர்பான் கானிற்கு புகழாரம் செலுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : நான் இர்பான் கானுடன் எ மைனாரிட்டி கான் என்ற படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது,நடிப்பில் அவர் தனித்த கலைஞனாக இருந்தார். அவருடன் இணைந்து பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி மற்றும் அவரது புன்னகை வசீகரமானது என தெரிவித்துள்ளார். மேலும், அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை கூறிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.<

கருத்துகள் இல்லை: