சனி, 16 மே, 2026

திமுவினரே ஓவரா பர்பாமன்ஸ் பண்ணாதீங்க, அது நமக்கு செட் ஆகாது- ஒரு உடன்பிறப்பின் ஆலோசனை

May be an image of text that says "အမ ஒரு திமுக பூமரிடமிருந்து சக பூமருக்கு!"

 Thamira Aathi :  திமுக பூமர்களுக்காக, ஒரு சக பூமரின் கரண்ட் சினாரியோ அறிக்கை
1. நீங்கள் அப்படியே என்னவோ கோட்டையே சரிந்துபோனது போலவும், அவமானப்பட்டது போலவும் நினைத்துக்கொள்ள இதில் ஒன்றுமேயில்லை. திமுக போன்ற கட்சிக்கு ஜெயலலிதாவிடம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோற்றுக் கொண்டிருந்ததை விட அவமானம் வேறொன்று இருக்கவே முடியாது. ஓவரா பர்பாமன்ஸ் பண்ணாதீங்க, அது நமக்கு செட் ஆகாது.
2. உலகத்துலயே இல்லாத ஆட்சியெல்லாம் நாம் பண்ணிவிட்டதாகக் கருத வேண்டாம். காங்கிரஸ், பிசேபி போன்ற வல்லாதிக்க சக்திகளுக்கு உட்பட்டு, நம்மாலியன்ற அளவில் இந்தியாவின் பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு கல்வி, உட்கட்டமைப்பு, பிற துறைகளில் சிறந்து விளங்குகிறோம். குறிப்பாக சமூகநீதியில் சற்று மேம்பட்டு நிற்கிறோம். அவ்வளவுதான். நாம ஜேம்ஸ்பாண்டுதான், ஜேம்ஸ்பாண்டுதான். அதுக்காக துப்பாக்கியை நீட்டி பிடிச்சமானிக்கே நிக்கத்தேவையில்லை.


3. இணையற்ற தலைவன், முன்களப்போராளி, வழிகாட்டி நமக்குக் கிடைத்திருக்கிறான். வேறு யாருக்கும் கிடைக்காத காலம் தந்த பொன். கலைஞரை எப்படி அவர் தகுதிக்கு ஈடாகாத ஜெயலலிதாவோடு போராட காலம் நிர்ப்பந்தித்ததோ, அப்படியே தளபதி ஸ்டாலினை, விஜய்க்கு முன்னால் நிறுத்தியிருக்கிறது. போர்க்களத்தில் எதிரிகளின் உயரத்தை அளந்துகொண்டிருக்க முடியாது. அங்கே வீரத்துக்கு மட்டும்தான் வேலை. ஆயுதங்கள் மட்டும்தான் பேசும். பாருங்க, தளபதி அதை ஏற்றுக்கொண்டு முதல் நாளே கடமையில் இறங்கிவிட்டார். முதல்வரின் பதவியேற்புக்கு வாழ்த்து தெரிவித்த கண்ணியம். அந்தப் பேச்சிலிருந்த தவறுகளுக்கு கண்டனம். கத்துக்குங்கடா!
4. நமக்கு புதிய எதிரி, கூடுதல் எதிரியெல்லாம் வந்துவிடவில்லை. அதிமுகவின் கதை முடிந்துவிட்டது. இனி தமிழக அரசியலில் இருந்து அதிமுக வெளியேறும். வெளியேற்றப்படுவார்கள். இப்போது மறுதேர்தல் நடந்தால் நம் வாக்கு சதவீதம் இம்மியளவும் குறையாது. அதிகரிக்கக்கூட செய்யலாம். ஆனால், வெற்றிபெறவே முடியாது. இருதலைக் கொள்ளியாய் குழப்பத்தில் அதிமுகவுக்கு போன வாக்குகள் அனைத்தும் சிந்தாமல், சிதறாமல் தவெகவுக்கு வந்துவிடும். 200 சீட்டுகளுக்கு குறையாமல் வெல்வார் விஜய். இனியும் நமக்கு ஒரே எதிரிதான், எதிரியின் முகம் மாறியிருக்கிறது, அவ்வளவுதான். பிறகேன் அவருக்கே நம் அனுமதியுடன் கூட்டணிக்கட்சிகள் ஆதரவளித்து முதல்வராக்க வேண்டும்? முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று, இன்னொரு தேர்தல் தவெகவை இன்னும் பெரியளவில் பலப்படுத்திவிடும். இரண்டு, அவரை பிசேபியின் கைகளுக்குத் தாரை வார்ப்பது, நம் மக்களைக் காக்க கடைசியாய் ஒரு வழியிருந்தும் அதைச்செய்யாத அறம் தவறியவர்களாகி விடுவோம். எதிரி எந்த ஆயுதத்தோடும் போராடலாம். அவர்களின் நோக்கம் வேறு. நாம் மக்களுக்கானவர்கள், அறத்தை இழந்து நம்மால் சண்டையிட முடியாது.
5. அப்படியானால் பிசேபியின் அடுத்த நகர்வு? இனி அவர்கள் அதிமுகவை நம்பிப் பயனில்லை. மெல்ல சிட்டியை டிஸ்மாண்ட்லிங் செய்து காயலான் கடையில் போட்டுவிடுவார்கள். போதுமான காலம் பொறுத்திருந்து சாம தான பேத தண்டங்களைப் பயன்படுத்தி தவெகவை தங்கள் வசப்படுத்துவார்கள். அதுவரை நாம் அவரைக்காத்து அரசியல் கற்றுத்தருவோம். அதன் பின்னர், மீண்டும் களம் இரண்டாகும். அது நடக்கவில்லை என்றால் கூட, ஒன்றும் பாதகமில்லை. சனாதனத்துக்கு அடங்காத சக்திகளாக இருக்க நாம் மட்டும்தான் ஒட்டுமொத்த குத்தகை எடுத்திருக்கோமா என்ன? தமிழகத்திலிருந்து ஒன்றுக்கு இரண்டாய் சக்திகள் ஒன்றியத்தை எதிர்த்து போராடட்டுமே? நல்லதுதானே? அப்படியானால் தமிழக ஆட்சி யாருக்கு? ஆட்சித்திறம் சார்ந்து மக்கள் அதை முடிவு செய்யட்டும்.
6. இறுதியாக தவெகவின் ஆயுதங்கள். எல்லாமே அநியாயமாகத் தெரிகின்றன, எல்லாம் சினிமா பில்டப்பாக இருக்கிறது, உலகெங்கும் சோதனை நிலையில் இருக்கும் டிஜிடல் வார்ஃபேரை கையிலெடுத்திருக்கிறார்கள். நம் கையில் கத்தி இருக்கையில் துப்பாக்கியை எதிரி கொண்டுவந்தது சரியா? போர்களில் விதிகளுக்கு இடமில்லை! நமக்கும் ஒரு காலத்தில் (50s 60s) சினிமா பில்டப் இருந்தது. நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான். டிஜிடல் வார்ஃபேரை நாமும் எடுத்துக்கொண்டாக வேண்டும். அவர்கள் பஞ்சத்துக்கு வைப் செய்பவர்கள். ஆனால், OG Vibe கிரியேட்டர்களே நாம்தான். அதை டிஜிட்டலுக்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. கருவி பழகுக!
7. விஜயிடம் நேர்மை இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லையே? இனியாவது தெரிகிறதா பார்ப்போம். தெரிந்தால் மகிழ்ச்சி. ஒருவேளை நம் சந்தேகம் சரிதான் என்றால், அது மக்களின் பிரச்சினை. நாம் மக்களின் வாரியர்ஸ் மட்டுமே! மன்னனைத் தேர்வது மக்களின் கடன்!
8. வெற்றியிலும், தோல்வியிலும் ஃபன் பண்ணிக்கொண்டிருப்பவன்தான் ஒரிஜினல் திமுககாரன் என்று என் அனுபவத்துக்கு கேள்விப்பட்டிருக்கிறேன். அதைத்தான் சற்று இழந்திருக்கிறோமோ என்று தோன்றுகிறது. ஃபன் பண்ணுங்கடா பக்கிகளா! 

கருத்துகள் இல்லை: