சனி, 27 டிசம்பர், 2014

நயன்தாரா : ஆண்டின்னு கூப்பிட்டா யாருக்குதான் கோபம் வராது?

நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் பிரேம்ஜி அமரனுக்கும் படப்பிடிப்பில் ‘திடீர்’ மோதல் ஏற்பட்டது. இருவரும் ‘மாஸ்’ என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதில் கதாநாயகனாக சூர்யா நடிக்கிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரேம்ஜி அமரன் படப்பிடிப்பில் ஜோக் அடித்து பேசுவது வழக்கம். சக நடிகர் நடிகைகளை தமாஷாக கேலியும் செய்வார். அது போல் நயன்தாராவையும் கேலி செய்தார். வயதான பெண்களை அழைப்பது போல் ‘ஆண்டி’ என்று நயன்தாராவை அழைத்தார். முதலில் இதை சாதாரணமாக நயன்தாரா எடுத்துக் கொண்டார். ஆனால் அடிக்கடி ஆண்டி, ஆண்டி என்றே கூப்பிட்டாராம். இது நயன்தாராவை எரிச்சல் படுத்தியது. தன்னை வேண்டும் என்று கேலி செய்வதாக நினைத்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரேம்ஜி அமரனை கோபமாக திட்ட துவங்கினாராம். இனி ‘ஆண்டி’ என்று கூப்பிட்டால் நடப்பதே வேறு என்றும் எச்சரித்தாராம். நயன்தாராவின் கோபத்தை பார்த்து படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. பிரேம்ஜி அமரனும் அமைதியாகி விட்டார். மாலைமுரசு.com

கருத்துகள் இல்லை: