வியாழன், 9 ஜனவரி, 2020

ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியவர் உயிரிழப்பு .. கண்டு கொள்ளாத தமிழக அரசு


Vini Sharpana : < இந்த இளைஞரின் மரணம் இதயத்தை துளைத்துக்கொண்டே இருக்கிறது. ஆட்டோ டிரைவரால் கடத்தப்பட்ட இளம்பெண்ணை காப்பாற்றச்சென்றபோது ஏற்பட்ட விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச்சேர்ந்த இளைஞர் யாகேஷ் மரணமடைந்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது பெண்களுக்கும், யாகேஷின் குடும்பத்திற்கும் இழைக்கப்படும் அநீதி. யார் என்றே தெரியாத ஒரு பெண் ஆபத்தில் கூக்குரலிடும்போது தன் உயிரையே கொடுத்து மீட்டிருக்கிறார் ரியல் ஹீரோ யாகேஷ்.
ஆனால், இன்றுவரை அரசியல்வாதிகளோ மக்கள் பிரதிநிதிகளோ சந்தித்து அந்த ஏழைக்குடும்பத்திற்கு ஆறுதல்கூட சொல்லவில்லை.
ஆபத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்ற சென்று உயிர்விட்ட அந்த இளைஞரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ‘ஆறுதல் தொகை’ வழங்குவதோடு விருதும் கொடுத்து சிறப்பிக்க வேண்டும். அப்போதுதான், கொடூரன்களால் பெண்கள் ஆபத்தில் சிக்கும்போது இளைஞர்கள் ஓடிவந்து காப்பாற்ற இன்னும் இன்னும் முன்வருவார்கள். இப்படி அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால், நமக்கு ஏன் வம்பு என்றுதான் இருந்துவிடுவார்கள்.
'தி’யாகேஷுக்கு வீரவணக்கம்!

கருத்துகள் இல்லை: