சனி, 10 மே, 2025

5 வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் மருத்துவமனையில் 10 மணி நேரம் கவனிக்க படவில்லை உத்தர பிரதேசம்

Representational image.
May be an image of hospital and text that says 'TOI 5-year-old rape survivor made to wait 10 hours for medical test in UP; government calls for action Representative image'

Vasu Sumathi :  மனசாட்சியை சிதறடிக்கும் இந்த செய்தியில் இரண்டு பகுதிகள்...
 ஒரு 5 வயது பச்சை குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்..  
அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் 10 மணி நேரம் கவனிப்பாரற்று கிடந்த அவலம்!
வன்கொடுமைக்கு ஆளான அந்த குழந்தை பிலிபித் மாவட்ட பெண்கள் அரசு மருத்துவமனையில் அன்றிரவு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் அந்த குழந்தைக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமல்,  10 மணி நேரத்திற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்திருக்கிறார். இது குழந்தையின் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கின் தடயவியல் ஆதாரங்களும் அழிந்துள்ளனவாம்.

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்!

 zeenews.india.com  - Yuvashree : India Pakistan War Stopped Indian Citizens Reaction
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகள், இந்தியர்கள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதலானது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில், பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்கள் மற்றும் முகாம்கள் குறிவைக்கப்பட்டு தகர்க்கப்பட்டதாக இந்தியா கூறியது.
இரு நாடுகளும் தாெடர்ந்து தங்கள் எல்லைகளில் தாக்குதல் நடத்தி வந்ததை அடுத்து, தற்போது போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகல் உண்மையை உடைத்த முக்தார்

பஹல்ஹாம்‌ கொ‌லைகள் + பீகார் தேர்தல் ! Flash back இந்திராவின் strategyகள், பாகிஸ்தானை முதலில் தாக்க தூண்டியது

 Dev JB  :  பஹல்ஹாம்‌ கொ‌லைகள் நடந்த தினத்திலிருந்தே நாம்  இருவரை மட்டுமே‌ குற்றம்‌ சாட்டுகிறோம். காரணமும் பீகார் தேர்தல்தான்னு தெளிவா சொல்றோம்.
போர்.. போர்.. னு இந்தியாவின் பதிலடியை  பொய், புனைவுகளுடன் நேரடியாக நாட்டின் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்களே பரப்பியதை எக்ஸ்போஸ் செய்தோம்.
கிட்டத்தட்ட 300 கிமீகள் சாவகாசமாக நடந்து வந்து மதத்தை கேட்டு, கதையெல்லாம் பேசிவிட்டு சுட்டுட்டு அதே சாவகாசமாக போயிருக்கானுகனு ச.ங்கிக சொல்றத எடுத்துக்குவோம். பாகிஸ்தானின் உள்ளே 9 இடங்களில் தீவிரவாதிகள் கேம்ப் இருந்ததை உளவுத்துறை கண்டுபிடித்து.... னு சொல்லும் போதே உள்நாட்டுக்குள் சாவகாசமாக சுத்தற தீவிரவாதிகளைப்பற்றியெல்லாம் னு கேள்வி கேட்காத அறிவுள்ளவர்களே கிடையாது...

60 திமுக தொகுதி பொறுப்பாளர்களின் பலர் தொகுதிகளை ஒரு முறை கூட சென்று பார்க்கவே இல்லை? Stalin drastic action

 மின்னம்பலம் - Kavi :  , திமுக பொறுப்பாளர்கள் மீது ஸ்டாலின் எடுத்த ஆக்‌ஷன் செய்தியும், எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா செய்தியும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. Stalin drastic action
“தேர்தல் நெருங்கி வருவதால் திமுக 234 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்களை மாற்றியும் நீக்கியும் சில அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் தொகுதி பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
ஏற்கனவே அக்டோபர் மாதத்திலும் அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதத்திலும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் மேல் வந்த புகார்கள் அடிப்படையில் 40 பேரை மாற்றியும் நீக்கியும் நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பாகிஸ்தான் நகரங்கள் மீது இஸ்ரேலிய ட்ரான் தாக்குதல்

 tamil.oneindia.com  - Shyamsundar : டெல்லி: பாகிஸ்தான் உள்ளே இந்தியா தாக்குதல் நடத்தும் நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் லாகூர் உள்ளிட்ட நகரங்களில் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
முக்கிய பாகிஸ்தானிய நகரங்களில் இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள மூன்று முக்கிய இராணுவ விமானத் தளங்களிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. சியால்கோட் மற்றும் நரோவலில் உள்ள பாகிஸ்தான் நிலைகளிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.

வெள்ளி, 9 மே, 2025

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் விடுதலை போருக்கு சாதகமான நிலை! பின்னணியில் இஸ்ரேல்?

 tamil.samayam.com -மரிய தங்கராஜ் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே எல்லையில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது ட்ரோன், போர் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் அதை முறியடித்து வருகிறது.
பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன. இந்தியா ஒரு பக்கம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரை குறிவைத்து பாகிஸ்தானுக்குள்ளே தாக்குதல் நடைபெறுகிறது.

துரைமுருகனின் இலாகா மாற்றம் திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை!

மின்னம்பலம் : தமிழக அமைச்சரவையில் இன்று (மே 8) மீண்டும் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ,தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறை மட்டுமல்லாமல் கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக துரைமுருகனும், சட்டத்துறை அமைச்சராக எஸ்.ரகுபதியும் இருந்து வந்தனர்.
தற்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கை வளத்துறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றி ஒதுக்கப்பட்டது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டது.
மூத்த அமைச்சர் துரைமுருகனின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
என்ன காரணம்?

இந்து மகளிர் கல்லூரி அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, ”அதிபரை கைது செய்” “

 பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முற்றுகை
ஜாபினா மு: பாலியல் வன்புணர்வுக்கு பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி  தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.  
“அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, ”அதிபரை கைது செய்” “இறுதி வரை போராடுவோம்”, “இறுதி வரை போராடுவோம்”, “கைது செய்”,“கைது செய்”, “கெட்டவனை கைது செய்”, “சங்கரனை கைது செய்” “வேண்டும்,வேண்டும் நீதி வேண்டும்” என்று கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புகார்தாரர் மனைவியிடம் அத்துமீறியதாக கைதான ஆவடி குற்றப் பிரிவு காவலர் பணியிடை நீக்கம்

Hindu Tamil  : ஆவடி: புகார்தாரர் மனைவியிடம் அத்துமீறியதாக கைதான ஆவடி குற்றப் பிரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், குமரன் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 13-ம் தேதி இரவு, ஆவடி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு, தன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை வைத்துவிட்டு, கடையினுள் சென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மாயமானது.
இதுகுறித்து, இளைஞர் அளித்த புகாரின் பேரில் ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாணவியின் மரணம் - திசைத் திருப்ப வேண்டாம் - சபையில் மனோ

 கொழும்பு ராமநாதன் பெண்கள் இந்து கல்லூரி மாணவி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்த நிகழவு இலங்கையை அதிரவைத்துள்ளது
மலையாகத்த்தை சேர்ந்த அந்த மாணவியை மரணத்திற்கு காரணமானவ இரு தமிழ் ஆசிரியர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி கொண்டே இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்

வியாழன், 8 மே, 2025

வடக்கில் நில அபகரிப்பு குறித்து அரசு வர்த்தமானி! எம் ஏ சுமந்திரன் அதிரடி

கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடாது - எம்.ஏ.சுமந்திரன் -  Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri  Lanka

 Veluppillai Thangavelu :  வடக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானி குறித்து ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு மக்களின் காணிகளைப் பிடுங்கும் நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு - தெற்கு உறவை மேலும் பாதிக்கச் செய்யும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு கோரி
'காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரம்' என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு,

பாகிஸ்தான் ராணுவத்தின் போர் நடவடிக்கை அதிகாரம் வழங்கிய பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்

 மின்னம்பலம் -  Kavi  :இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஆயுதப்படைக்கு  அந்நாட்டுஅரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
Pakistani government given authority to armed forces
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற குறியீட்டு பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.  
இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்தநிலையில் பாகிஸ்தான்  அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் நடவடிக்கையை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், “”ஒரு போர் நடவடிக்கை” என்று குறிப்பிட்டார்,

நாடு முழுவதும் 27 விமான நிலையங்கள் மூடல் - 400 விமானங்கள் நிறுத்தம் எல்லையில் பதற்றமாம்

 மாலை மலர் :  பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
இதைத்தொடர்ந்து வான்மண்டல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள 25 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

புதன், 7 மே, 2025

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்! போர் மூண்டது?

 மாலை மலர்  :  புதுடெல்லி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

திங்கள், 5 மே, 2025

வக்பு வாரிய நிலத்தில் வீடு கட்டிய அம்பானி! கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

 Kanimozhi MP alleges Waqf Amendment Act to save Ambani's house
மாலை மலர்  : வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் மாலை நேர கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
3-வது நாளாக நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., தலைமை தாங்கினார்.
இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

பெரியார் இயக்கங்கள் புலிகள் புகழ் பாடி பெரியாரை கொன்றுவிட்டார்கள்?

No photo description available.

ராதா மனோகர் : பெரியார் Vs பிரபாகரன்?  அதிகமாக எதுவும் கூறி இனி என்னவாகப்போகிறது?
தமிழக பெரியார் இயக்கங்கள் பெரியாரை கொன்றுவிட்டார்கள்
பிரபாகரனையும் அவரது பாசிச அரசியலையும் ஆதரிப்பது என்பது பெரியாரை கொல்வதற்கு இணையானது
இன்று என்னை போலவே பெரியார் வாழ்வியலை புரிந்து கொள்ளும் எந்த இலங்கை தமிழர்களாலும் பெரியரையோ திராவிடத்தையோ இலங்கையில் பேசமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது
ஆம் பெரியார் பெரியார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் பல பெரியார்வாதிகள்   புலிகள் புலிகள் என்று அறுநூறு தடவைகள் உச்சரிக்கிறார்கள்
அதாவது பெரியார் என்று கூறும் போது கூடவே பிரபாகரன் புலிகள் என்ற எக்ஸ்டரா லங்கேஜும் ஏற்றி வைக்கப்படுகிறது

அண்மையில்  திராவிடர் கழக  இளம் பேச்சாளர்  கூட பிரபாகரனின் பெரிய படத்திற்கு முன்னால் போஸ் கொடுத்திருந்தார்
பெரியவர்களை பற்றி பேசவே வேண்டாம்.
பெரியாரை மொத்தத்தில் இன்றும்  கொன்று கொண்டே இருக்கிறார்கள் இவர்கள்
பாவம் பெரியார்

ஞாயிறு, 4 மே, 2025

இந்தியா அணை கட்டினால் அழிப்போம்'- பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

 BBC News தமிழ் : பாகிஸ்தானின் நீர்வழிப் பாதையை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ இந்தியா ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவை எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியான ஜியோ நியூஸின் 'நயா பாகிஸ்தான்' நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், "இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறி, தண்ணீரை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகக் கருதப்படும். அந்தக் கட்டமைப்பை நாங்கள் அழிப்போம்" என்றார்.

திமுக மாசெக்கள் கூட்டத்தில் வெடித்த பிரச்சனை... ஷாக்கான ஸ்டாலின்

 மின்னம்பலம் - vanangamudi : திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 3) நடைபெற்றது. Dmk district secretary meeting
இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
வரும் ஜூன் 1-ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம், 1,244 இடங்களில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட நான்கு தீர்மானம் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சனி, 3 மே, 2025

புலம்பெயர் நாடுகளில் வெற்றி பெற்ற ஆறு தமிழ் நாடாளுமன்ற பெண் எம்பிக்கள்

May be an image of 1 person
May be an image of 2 people and text that says 'RATHIKA SITSABAIESAN SITSABAIESAN Scarborough- Houge Rier ON'
May be an image of 1 person, smiling and text

ராதா மனோகர் :  இலங்கை தமிழர்கள் புலர்ந்த நாடுகளில் இதுவரை ஆறு பெண்கள் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளார்கள்
நிச்சயமாக இந்த வெற்றிகள் நாம் கொண்டாட கூடிய  விடயம்தான்.
புலம்பெயர் இலங்கை தமிழர் வாழும்  நாடுகளில்  ஆண்கள்தான் அதிகமான அளவில் அந்தந்த நாட்டு தேர்தல்களில் அதிகம் பங்கு போற்றுகிறார்கள்
ஆனால் அவர்கள் ஏன் பெண்களை போல வெற்றிகளை பெறுவதில்லை?
(ஒரே ஒரு ஹரி ஆனந்தசங்கரி மட்டுமே விதிவிலக்கு . அதுவும் அவரின் தந்தையின் செல்வாக்கு மற்றும் புலி மாபியாவின் பக்கபலம் என்றும் கூறப்படுகிறது)
தாங்கள் புலம் பெயர்ந்த நாட்டின் அரசியல் சமூக சிந்தனை மற்றும் அந்நாடுகளின் வரலாறு போன்றவற்றில் உள்ள புரிந்துணர்வுதான் காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்

பஹல்காம் பயங்கரவாதிகள் இலங்கை தப்பினார்களா?

தினமலர் : கொழும்பு: சென்னையில் இருந்து சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சென்றதாக வெளியான தகவலை தொடர்ந்து, கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கொழும்பு மாணவி மாடியிலிருந்து வீழ்ந்து தற்கொலை ! துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

May be an image of 1 person and text that says 'மர மரண ண அறிவித்தல் பிறப்பு 2009 11 12 இறப்பு 2025 04 29 டில்ஷி அம்ஷிகா அலுத்வத்தை, திகன, கணடியை பிறப்பிடமாகவும் கொழும்பு- 13 கொட்டாஞ்சேனை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் சமிலாகுமாரி அவர்களின் செல்வப்புதல்வி டில்ஷி அம்ஷிகா (அம்ஷி) அவர்கள் 29.04.2025 செவ்வாய்கிழமை அன்று அகால மரணமானார் அன்னாரின் பூதவுடல் 01.05.2025 வியாழக்கழமை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் வைக்கப்பட்டு பகல் 2.00 மணியளவில் கெரவலபிடிய பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகிறோம் தகவல் தந்தை அமிர்தலிங்கம் -0773849389 சித்தப்பா ரமேஸ் -0777125082'

Mahan Siva கொழும்பு ராமநாதன் இந்து கல்லூரி   ஆசிரியர் சங்கரன்  பாடசாலையில் மாணவி  துஷ்பிரயோகம்!!
மாணவி மாடியிலிருந்து வீழ்ந்து தற்கொலை!
கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்று வந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞசேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாணவியின் தற்கொலைக்கு பின்னால் உள்ள விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
மாணவி கல்வி கற்றுவந்த பாடசாலையில் கற்பித்த கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளார்.
இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக,மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த ஆசிரியரை காப்பாற்றியுள்ளது.

வெள்ளி, 2 மே, 2025

இஸ்ரேலில் காட்டுத்தீ – புகைமூட்டமாக காணப்படும் ஜெருசலேம்

 தினகரன் : ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீ காரணமாக பல கிராமங்கள் அபாயத்தில் உள்ளன. ஏராளமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில், 10 ஆண்டுகளில் மிக மோசமான தீ விபத்தாக இது கருதப்படுகிறது. வீடுகள் மற்றும் வனப்பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

flash back கந்தகார் விமான கடத்தல் - கோட்டை விட்ட பாஜக அரசு inside story of IC-814 hijacking -

 Vimalaadhithan Mani  :  இதே பாஜக கட்சி ஆட்சியில 1999 ல ஏர் இந்தியா விமானம் நேபாளத்துல இருந்து தீவிரவாதிகளால் கடத்தப்படுது .
பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பைலட்டை ஓட்டிட்டு போக சொல்ரானுங்க.
ஆனா நம்ம பைலட் கொஞ்சம் புத்திசாலி தனமா பெட்ரோல் இல்லைன்னு சொல்லி டெல்லியில தரையிறக்குறார்.
 நம்ம பாதுகாப்பு படை அந்த விமானத்தை சூழ்ந்து கொள்ளுது..
இந்திய தேசிய பாதுகாப்பு படையான NSG விமானத்தில் புகுந்து தாக்க அனுமதி கேட்குறாங்க.
இதே ஆளும் பாஜக கட்சி அனுமதி கொடுக்கல.
விமானம் அங்கிருந்து கிளம்பி பஞ்சாப் அமிர்தசரஸில் தரையிறங்குது.
அங்கேயும் NSG விமானத்துக்குள் புகுந்து தாக்குதல் நடந்த அனுமதி கேட்குது, ஆனா இவனுக கொடுக்கல.
பெட்ரோலை நிரப்பிட்டு துபாய்க்கு போயிட்டு,
விமானம் ஆப்கானிஸ்தான் கிளம்பிட்டு அங்கே போய் நிறுத்திடுறானுக.

வியாழன், 1 மே, 2025

டாடா விமான சேவைக்கு ரூ.5000 கோடி இழப்பு! பாகிஸ்தான் வான்வழி மூடல்

 tamil.goodreturns.i - Prasanna Venkatesh :
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியை மூடியது.
பாகிஸ்தான் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு மூடியதால், ஏர் இந்தியா விமான நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 600 மில்லியன் டாலர் (ரூ.5000 கோடி) இழப்பை சந்திக்கும் என மதிப்பிட்டு, இதற்கு ஈடுசெய்ய மத்திய அரசிடம் மானியம் கோரியுள்ளது.