புதன், 28 அக்டோபர், 2015

வாடகைத் தாய்க்கு தடை? .The baby factory: huge clinic in Gujarat ..

The baby factory: In a huge clinic in India, hundreds of women are paid £5,000 each to have Western couples' babies Dr Nayna Patel is building a one-stop surrogacy shop in Gujurat, India It will house hundreds of poor women willing to carry others' children She has been accused of exploiting the poor in expanding her business Dr Patel says she is giving poor Indian women and couples a lifeline
தாய் முறையை வெளிநாட்டினர் பயன்படுத்த விரைவில் தடை விதிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்த வெளிநாட்டினரும் இந்தியாவில் வாடகை தாய் பெற சுப்ரீம் கோர்ட் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தள்ளது.
வாடகை தாய் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு இன்று (அக், 28) மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், வர்த்தக ரீதியிலான வாடகை தாய் முறைக்கு விரைவில் தடை விதிக்க உள்ளோம். அதனால் வெளிநாட்டு தம்பதிகள் இந்திய வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதற்கு அவுனுமதி அளிக்கப்படாது. அரசு உயர் மட்டக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் சொர்க்க மாநிலமான  குஜராத்தில் தான் இந்த கொடுமை கொழுந்து விட்டு எரிகிறது
"இந்த விவகாரம் தொடர்பாக சோலிசிடர் ஜெனரல் ரஞ்சித் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார். அதேசமயம் குழந்தையில்லாத இந்திய தம்பதிகள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதில் எந்த தடையும் இல்லை. அது குறித்தும் ரஞ்சித் குமார் தெளிவுபடுத்துவார். இந்தியாவில் இருந்து செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருக்கள் இலவசமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு 2013ம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தக இயக்குனருக்கு (Directorate General of Foreign Trade) விதிக்கப்பட்ட உத்தரவும் திரும்பப் பெறப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விரைவில் மத்திய அரசு பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை: