சனி, 13 ஜூலை, 2024

திரு அமிர்தலிங்கம் கொலையில் திரு யோகேஸ்வரன் எம்பியின் பின்னணி! இன்று 35 ஆண்டு நினைவு நாள்

May be an image of 1 person
Alfred Duraiapa
May be an image of 1 person and text
May be an image of text

ராதா மனோகர்  ;  இன்று திரு அமிர்தலிங்கம் அவர்களின்  35 ஆண்டு நினைவு நாள்!
இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானதில் திரு அமிர்தலிங்கம் அவர்களின் பங்கு தலையாயது!
திராவிட இயக்கத்தில் தனது அரசியலை ஆரம்பித்து பின்பு திரு செல்வநாயகத்தின் தமிழ் தேசியத்தை நம்பி அதில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார்
செல்வநாயகத்தின் தமிழ் தேசியம் மக்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு பல தவறுகளை திருத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
ஆயுத குழுக்களிடம் இருந்து மக்களை மீட்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உருவாகக்கியத்தில் திரு அமிர்தலிங்கம் அவர்களின்  பங்கே பிரதானமானது.
(இது பற்றிய ஒரு விரிவான நூலை திரு கௌரா ராஜசேகரன் Gowra Rajasekaran அவர்களின் சீதை பதிப்பகம் வெளியிடுகிறது)
இதன் காரணமாகவே அவர் அரசியல் அரங்கில் இருந்து கொடூரமாகon 13 July 1989 இல்  அகற்றப்பட்டார்
ஜனாதிபதி திரு  பிரேமதாசாவோடு புலிகள் ஹனிமூன் கொண்டாடிய காலம் அது
இதன் மூலம் அவர்கள் தங்கள்  கொலை வெறியாட்டத்தை நாடு  முழுவதும் விரிவாக்கம் செய்த  காலம் அது!

கலைஞர் நடத்திய கல்லக்குடி போராட்டத்தின் நினைவு நாள் இன்று

 tamil.oneindia.com  - Hemavandhana :  வரலாறு படைத்த கல்லக்குடி.. இன்னும் டால்மியாபுரம் என்றே அழைப்பதா.. கிளப் ஹவுஸ் விவாதம்!
கலைஞர்  நடத்திய கல்லக்குடி போராட்டத்தின் நினைவு நாள் இன்று
சென்னை: "வரலாறு படைத்த கல்லக்குடியை இன்னும் டால்பியாபுரம் என்றே அழைப்பது வேதனையாக இருக்கிறது.. தலைவர்களின் நினைவாக இடப்பட்டுள்ள இடங்களின் பெயர்களை, முழுமையாக இனி உச்சரிக்க வேண்டும்" என்று அரக்கர் மன்றம் சார்பில் அழுத்தமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்லக்குடி போராட்டம் என்பது என்ன? அதில் கலைஞரின்  பங்கு என்ன? இன்றளவும் கல்லக்குடியை தமிழின மக்கள் உச்சரிக்க காரணம் என்ன? ஒரு சின்ன பிளாஷ்பேக்..!

கலைஞர் குறித்து அவதூறு : சீமான் மீது குண்டர் சட்டம் வேண்டும்!

 கலைஞர் செய்திகள் - KL Reshma :  சென்னை வெப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.
குறிப்பாக நேற்று எழும்பூர் ரயில் நிலையம் அருகே அழகு முத்துக்கோன் அவர்களின் 314 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் பல்வேறு கட்சி இயக்கங்களை சார்ந்தவர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வந்தது.
அப்போது நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து அவதூறாக பேசியுள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது.

வெள்ளி, 12 ஜூலை, 2024

அமைச்சர் கீதா ஜீவன் : சீமான் தனது மனநிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது!

 நக்கீரன் : விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

வியாழன், 11 ஜூலை, 2024

ரவுடி துரை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை .. புதுக்கோட்டையில்

tamil.indianexpress.com : புதுக்கோட்டையில் ரவுடி துரை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ரவுடி துரையை புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் போலீசார் பிடிக்க சென்றபோது, போலீசாரை தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்தார்

சாட்டை துரைமுருகன் கைது! ஸ்டாலின் குறித்து அவதூறு !

 tamil.oneindia.com -  Vishnupriya R  சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன் தெரிவித்த கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்... என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

சுல்பிகர் அலி பூட்டோ: 'பொய் சாட்சிகளால் தூக்கிலிடப்பட்ட நிரபராதி' - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோ, 'பொய் சாட்சியத்தின் பேரில்' தூக்கிலிடப்பட்ட நபர்!
BBC News தமிழ்  :  "ஒருவேளை என்னை மன்னித்தால், இந்தக் கொலை தொடர்பான உண்மைகளை என்னால் வெளியே கொண்டு வர முடியும்."
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டதில் முக்கியப் பங்கு வகித்த, மன்னிக்கப்பட்ட சாட்சியான மசூத் மஹ்மூத் தனது அறிக்கையில் கூறிய வார்த்தைகள் இவை.
பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில், திங்களன்று வெளியிடப்பட்ட 'சுல்பிகர் அலி பூட்டோ- அதிபர் குறிப்பு வழக்கின்' தீர்ப்பில் 'கயமை மற்றும் பொய் சாட்சியால் பாதிக்கப்பட்டவர் சுல்பிகர் அலி பூட்டோ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.       'நியாயமான விசாரணையின்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட்டார்' என்றும், 'சுல்பிகர் பூட்டோவை தூக்கிலிடும் முடிவு ஜெனரல் ஜியா-உல்-ஹக்கிற்கு நேரடியாகப் பலனளித்தது' என்றும், சுல்பிகர் அலி பூட்டோ

100 வயதைக் கடந்த 450 பேர் இலங்கையில் வசிப்பதாகத் தகவல்!

 hirunews.lk : 100 வயதைக் கடந்த 450 பேர் இலங்கையில் வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றில்
இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கான விசேட அரச கொடுப்பனவுக்குத் தகுதி பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் 2.7 மில்லியன் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் கூறியுள்ளார்.

புதன், 10 ஜூலை, 2024

Being There வார்த்தைகளை தாண்டிய ஒரு உலகம்! தயாரிப்பு $7 மில்லியன் - வசூல் $30.2 மில்லியன்

ராதா மனோகர் :   Being There வார்த்தைகளை தாண்டிய ஒரு உலகம்! 7 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்டு $30.2 மில்லியன் டாலரை வசூலித்தது
Peter Sellers Shirley MacLaine
Being There  இது 1979 வெளிவந்த ஆங்கில படம்.
இந்த திரைப்படம் மிகவும் சவாலான ஒரு கதையை மிகவும் நுட்பமாக கையாண்டு வெற்றி பெற்றது.
மிக சவாலான இக்கதையில் நடித்தவர்கள்,
புகழின் உச்சியில் இருந்த பீற்றர் செல்லர்ஸ், ஷேர்லி மக்கலின் மைக்கல் டக்லஸ் போன்றவர்கள்!
ஒரு பெரிய பணக்காரர் இறந்து விடுகிறார்.
அவரின் வீட்டு தோட்டத்தை கவனித்து வந்த ஒரு விதமான மனிதரின் கதைதான் இது.
அந்த தோட்டக்காரர் கார்டனர் Chauncey Gardner  என்றே தன்னை குறிப்பிடுகிறார்.

May be an image of 2 people and fur coat

வீட்டுக்காரர் இறந்ததும் வேறு ஊரில் இருந்த அவரின் வாரிசுகள் வந்து வீட்டை பொறுப்பெடுக்கும் பொழுது இந்த கார்டனருக்கு செலுத்த வேண்டிய பணம் பற்றிய பேச்சு வருகிறது.
அப்போது கார்ட்னர்  தனக்கும் இந்த வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டு,
.தனது ஆடைகளை மட்டும் எடுத்துகொண்டு அடுத்த நேர வாழ்வைப்பற்றி எதுவித சிந்தனையும் இன்றி வெளியேறுகிறார்.
அந்த பணக்காரரின் ஆடைகளை அணியும் உரிமையை அவர் இவருக்கு கொடுத்திருந்தார்.
அந்த வீட்டை விட்டு மிகவும் விலை உயர்ந்த கோட்சூட் அணிந்து இவர் போவதை பார்த்தால் இவர் ஒரு வெறும் மனிதர் என்று யாருக்கும் தோன்றாது.

ஆம்ஸ்ட்ராங் கொலை... போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு?

Deal with firm that defrauded Rs.2.5 K crore from public led to killing of Arcot Suresh and Armstrong?

minnambalam.com -Aara  :   பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம், சென்னை மாநகர காவல் ஆணையரையே மாற்றியிருக்கிறது.
மாநகர காவல் ஆணைர் மட்டுமல்ல… சென்னை காவல்துறையின் முக்கிய பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை மாநகர புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் அருண் ஐ.பி.எஸ்., அதன் பின் முதன் முதலாக செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் ஆக்‌ஷன் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வப்பெருந்தகை கடந்து வந்த (ரவுடி) பாதை” - வழக்குகளை பட்டியலிட்ட அண்ணாமலை ..

Hindu Tamil  : சென்னை: “செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை:
* ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி

* 2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)

பகுஜன் சமாஜ் தலைவர் ஆகிறாரா பா.ரஞ்சித்?

 மின்னம்பலம் - Aara : கடந்த ஜூலை 5 ஆம் தேதி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்ததோடு, இறுதி நிகழ்வு முழுவதிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில் ஜூலை 8 ஆம் தேதி இரவு பா.ரஞ்சித் தனது சமூக தளப் பக்கத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் திமுக அரசை நோக்கி வெளிப்படையாக அழுத்தமான சில கேள்விகளை எழுப்பினார்.
“பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்.

உத்தர பிரதேசத்தை சூறையாடும் குஜராத்தி மாபியாக்கள் ..உபி முதல்வரின் கையறு நிலை

May be an image of 3 people and temple

தமிழ்க்கவி  :  உபியில் தற்போதைய நிலை பற்றி சமாஜ்வாடி தலைவர் ஐபி. சிங் வெளியிட்ட பதிவு :
"நாடாளுமன்றத் தேர்தலில் பைசாபாத் தொகுதியில் பிஜேபி தோற்றத்திலிருந்து அயோத்திக்கு முதல்வர் யோகி செல்வதில்லை
 அயோத்தி 4 அடி தண்ணீர் நிரம்பியது, அவசர மருத்துவமனை நீரில் மூழ்கியது, விமான நிலையம் மூழ்கியது, சாலைகள் அழிந்தது, வளர்ச்சி முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
 90% வேலை குஜராத் நிறுவனங்களிடமே இருந்தது.
 50% கமிஷன் பந்தயம் வெளிப்படையாக நடத்தப்பட்டது, அது இன்றும் தொடர்கிறது.
 அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படவில்லை அல்லது 30 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சியை சிஏஜி தணிக்கை செய்யவில்லை.
 உ.பி.யில் இதுபோன்ற வெளிப்படையான ஊழல் நடந்ததில்லை.
 உ.பி.யை வெளியாட்கள் சூறையாடுகின்றனர்.
 உ.பி.யில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துக்கொண்டிருக்க, முதல்வர் இந்த கொள்ளையை நிராதரவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் "

சுயஜாதி ஆதிக்க அரசியலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிர்வினைகளும்

May be an image of 5 people and text
May be an image of 3 people and text
May be an image of 1 person and text

LR Jagadheesan :  தமிழ்நாட்டு தலித்தியம்: ஆண்டைத்தனத்தின் மறுஅவதாரம்!
திரையில் தோன்றிய கதாநாயகர்கள் நடத்திய கற்பனைக் கட்டப்பஞாயத்துகளை எதிர்த்து அவை ஆண்டை ஜாதிகளின் ஆதிக்கக்குறியீடுகள் என்று மிகக்கடுமையாக கண்டித்துக்களமாடிய,
பக்கம்பக்கமாக ஆய்வுக்கட்டுரைகளை தீட்டிய, ஆவேசம் பொங்க அரசியல் மேடைகளில் சன்னதமாடிய உத்தமர்கள்;
அந்த திரைப்படங்களால் தான் தமிழ்நாட்டில் ஜாதிக்கலவரங்களே உருவானதாக ஓங்காரக்குரலில் கண்ணீர் கொப்பளிக்க உரத்துச்சொன்ன அம்பேட்காரிஸ்டுகளும், அயோத்திதாசரிஸ்டுகளும் நவயுக தலித் தலைவர்களும் அவர் தம் அறிவுசீவிகளும்,
கடந்த நான்குநாட்களாக தமிழ்நாட்டின் தலைநகரில் நிஜத்தில் இயங்கிய கட்டப்பஞ்சாயத்து கும்பலின் தலைவரை,
 போற்றிப்பாடடி பெண்ணே ஆம்ஸ்ட்ராங்க் காலடி மண்ணே என்று கொண்டாடும் அழகைக்காண கண்கோடி வேண்டும்.

கட்டப்பஞ்சாயத்து கும்பல் கொலைகளும் சட்டம் ஒழுங்கு அறச்சீற்றங்களும்

May be an image of 1 person and text
LR Jagadheesan :  சட்டம் ஒழுங்கும் கட்டப்பஞ்சாயத்து கும்பல் கொலைகளும்
ஒரு மாநிலத்தின் மாநகரத்தின் சட்டம் ஒழுங்குக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரௌடிகும்பல்கள். அதிலும் அரசியல் லேபிளில் இயங்கும் கட்டப்பஞ்சாயத்து ரௌடிகும்பல்கள் கூடுதல் கொடூரம்.
அவர்களுக்கு எண்ணிக்கை பலம்கொண்ட ஜாதியும் பின்புலமாக இருந்தால் அவர் காவல்தெய்வமாகவும் கடையெழு வள்ளல்களின் நவீன அவதாரமாகவும் போற்றப்படுவார்.
அப்படிப்பட்ட அரசியல் லேபிளில் செயற்பட்ட ஜாதிச்செல்வாக்குமிக்க மோசமான கட்டப்பஞ்சாயத்து கும்பல் தலைவரின் படுகொலையை காட்டி,
 ஒரு மாநிலத்தின்/மாநகரத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது,
 என்று முக்கோ முக்கென முக்கிக்கொண்டிருக்கும் “மூத்த செய்தியாளர்கள்” தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் உலக அதிசயங்களில் ஒன்று.

செவ்வாய், 9 ஜூலை, 2024

மெடிக்கல் மாஃபியாக்களின் கைகளில் மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலை!


thesam net : சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சுகாதார அமைச்சின் கடிதத்திற்கு அமைய, வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் முன்னிலையில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பா.ரஞ்சித்..இது கூட உங்களுக்கு தெரியலையா? திமுக ச கேள்வி.. பரபர மோதல்

armstrong pa ranjith tamil nadu

tamil.oneindia.com  -  Shyamsundar I  சென்னை: ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் செய்திருந்த ட்விட்டிற்கு திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதையடுத்து அவரின் உடன் நேற்று திருவள்ளூரில் அடக்கம் செய்யப்பட்டது.

திங்கள், 8 ஜூலை, 2024

இந்திய தேர்தலும் முடிந்தது - போரும் முடிந்தது சம்பந்தர் அய்யா விரும்பிய மாதிரியே எல்லாம் நடந்தது!!!

May be an image of 1 person

 ராதா மனோகர் : மறைந்த திரு .சம்பந்தர் அய்யாவின் ஆளுமைக்கு சான்றாக ஒரு வரலாற்று செய்தி!
இலங்கையில் போர் முடிவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில் ஒரு சில இலங்கை தமிழ் எம்பிக்கள் இந்திய ஒன்றிய தலைவர்களோடு மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்கள்
அப்போது ஆட்சியில் ( 2009) இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களோடும் ,
பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவின் தலைவர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்,
பாஜகவினரோ  எப்படியும் நாம்  ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று அதீத நம்பிக்கையில் இருந்தன!
இரு காட்சிகளின் தலைவர்களும்  இலங்கை தமிழ் எம்பிக்களிடம் உங்கள் தலைவர்களோடு வந்து பேசினால்தான் இதுபற்றி ஒரு தெளிவான தீர்மானத்திற்கு வரமுடியும் என்று தெரிவித்தன!

வடஇந்திய தலைவர்களுக்கு கொஞ்சம் நெருக்கமாக காட்டிக்கொள்ள வடஇந்திய பாணி ஷெர்வானி எல்லாம் அணிந்திருந்த அந்த இலங்கை தமிழ் எம்பிக்கள் உடனடியாக சென்னை வந்து திரு சம்பந்தன் அய்யாவிடம் இது பற்றி பேசினார்கள்.

புதிய குற்றவியல் சட்டங்கள் : திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு - முதலமைச்சர் உத்தரவு!

 Kalaignar Seithigal -  KL Reshma :  ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :

Jaffna மெடிக்கல் மாபியாவுக்கு எதிராக போராடும் டாக்டர் அர்சுனா ராமநாதன் பாராளுமன்ற விசாரணைக்கு கொழும்பு சென்றார்

 

Annesly Ratnasingam  :  தனி ஒருவனாக உண்மைக்கு குரல்கொடுக்கும் வைத்தியர் "அர்சுனா ராமநாதனுக்கு" எனது பூரண ஆதரவு.
சுய நலமில்லாது யாழ் வடமராச்சி மக்களுக்காகவே தனது சேவையை, உயிரை பணயம் வைத்து கொண்டு தனித்தே போராடும் அவருக்கு எனது ஆதரவு.
ஊழல் மிக்க இந்த நாட்டின் முழு செயற்பாடும் மாறுமட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை.
சில நேரங்களில் அவரின் இந்த போராட்டம் தோல்வியில் முடியலாம்.
 ஆனால் அவர் பற்றவைத்த இந்த நெருப்பு தொடர்ந்து எரியும்..
நாட்டில் தலையில் இருந்து கால் வரை எங்கும் எதிலும் ஊழல்.
இதை முற்று முழுதாக துடைத்து அகற்றும் வரை நாடும் நாமும் முன்னேற முடியாது.
அன்று குருநாகலில் வைத்தியர் ஷாகி.
இன்று சாவகச்சேரியில் வைத்தியர் அர்சுனா..
தனியே போராடிய, போராடும் இவருக்கு எந்த ஒரு வைத்தியரும் வெளி வெளியாக தமது ஆதரவை தெரிவித்ததில்லை..
காலம் பதில் செல்லும்.   வாய்மையே வெல்லும்.

யாழ்ப்பாண சிவபூமி இல்லத்தில் மலையக மாணவிகளுக்கு மூடிய குளியலறையில் குளிக்க அனுமதி கிடையாது

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை - கலாநிதி  ஆறுதிருமுருகன்

Arun Ambalavanar :   Breaking News
துர்க்காபுரம் மகளிர் இல்ல/சிவபூமி விவகாரம் பின்வரும் முகநூல் முதல் பட பதிவிலிருந்தே ஆரம்பிக்கிறது. இவ்வாண்டு மேமாதத்தில் மலையகத்தில் க/பொ/த சாதாரண தரத்தில் சிறப்பாகத் தேறிய 29 மலையக மாணவிகளை யாழ்ப்பாணத்தில் A/L படிக்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி சிவபூமி அறக்கட்டளை அவர்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருகிறது. அவர்களை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்கவைக்கிறது.
சேர் பொன் ராமனாதன் காலத்து மலையகம் இப்ப இல்லை என்பது சிவபூமி அறக்கட்டளைக்கு தெரியாது. அவளவை தோற்றத்தில் மட்டும் அழகிகள் இல்லை.
இந்த 29 மகளிர்தாம் மூடிய குளியலறையில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டவர்கள். முதல் நாளே ஸ்மாட்டான 5 பெண்கள் தாங்கள் குளிக்க அனுமதிக்கப்பட்ட திறந்த வெளியை ஒரு கமெரா கண்காணிப்பதை கண்டு கிளர்ச்சி செய்து வெளியேறினார்கள். அவர்கள் கேட்டது உள்ளேயுள்ள மூடிய குளியல் அறைகளில் தங்களை குளிக்க அனுமதிக்கவே. அது மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

மாயாவதி : ஆம்ஸ்ட்ராங் படுகொலை... உண்மையான குற்றவாளிகள் எங்கே?

 மின்னம்பலம் - christopher  :  படுகொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இன்று (ஜூலை 7) அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை (52) கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் பைக்கில் வந்த 6 பேர் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாவகச்சேரி வைத்திய அதிகாரியை கைது செய்ய முயற்சி.... வைத்தியசாலை மூடல்... தென்மராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்

 ceylonmirror.net :சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை தாக்கிய குண்டர் வைத்தியர்கள் கைது செய்யப்படாததால் விபரீத அறிகுறிகள்…
வைத்தியசாலைக்கு அருகில் போராட்டம் அதிகரிக்கும்…
சாவகச்சேரி வர்த்தக சங்கம் நாளை கடைகளை அடைத்து ஹர்த்தால் பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வைத்தியசாலையின் சகல பணிகளும் முடங்கியுள்ளதுடன் வைத்தியசாலையின் வார்டுகள் மூடப்பட்டு உள்நோயாளிகள் கடந்த 6ஆம் திகதி வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
மேற்படிப்புக்காக அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் , பிரதி வைத்திய அத்தியட்சகராக அர்ச்சுனா என்பவர் நியமனமாகியுள்ளார் .​​​​​​​​

ஞாயிறு, 7 ஜூலை, 2024

பக்தி இயக்கத்திடம் தமிழ் மொழியை பறிகொடுத்த தமிழர்கள்

 ராதா மனோகர் : பக்தி இயக்கம் என்று அழைக்கப்படும் வழிபாட்டு இயக்கம் தமிழ் மொழியை கைப்பற்றியது!
தமிழ் மொழியில் சைவ வைணவ மசாலா கதைகளை பாடல்களை திணித்தனர்
இன்றுள்ள நிலைமை என்னவென்றால் தமிழ் மொழில் இருந்து  பக்தி இலக்கியத்தை நீக்கி விட்டால் தமிழில் ஒன்றுமே இருக்காதுஎன்று நாக்கூசாமல் சிலர் கூறுகிறார்கள்
ஆரியர்கள் முதலில் கைப்பற்றியது தமிழ் மொழியைதான்
அதன் பின்பு அரசர்களை மந்திரம் மாயம் பெண்ணாசை எல்லாம் காட்டி மயக்கி நிலத்தையும் பொருளையும் கொள்ளை கொண்டனர்
தமிழ் மொழியை பக்தி இயக்கத்தின் திரிபு கதைகளிலும் புராணங்களில் இருந்தும் மீட்கவேண்டிய அவசியம் தற்போது உள்ளது
இல்லையேல் சங்கிகள் சர்வ சாதாரணமாக பக்தி என்ற போர்வையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி விடுவார்கள்.

ஐம் பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம்,
சீவக சிந்தாமணி,
வளையாபதி
இவை மூன்றும் சமண சமய சார்புடையவை.
மணிமேகலையும்,குண்டல கேசியும் பௌத்த சமய நூல்கள்.
ஐஞ்சிறுங் காப்பியங்களும் சமண சமய காப்பியங்கள்.
 எட்டுத் தொகை நூல்களான
நற்றினை,
குறுந்தொகை,
ஐங்குறு நூறு,
பதிற்றுப் பத்து,
பரிபாடல், கலித்தொகை, அகநானூறு,புற நானூறு ஆகிய எட்டும் சமண நூல்கள்.

யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் தென்மராட்சி மக்கள் போராட்டம்!

Thesam Jeyabalan :  யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் தென்மராட்சி மக்கள் போராட்டம்!
“தனியார் மருத்துவமனைகளை வளர்ப்பதற்காக அரச மருத்துவமனைகளை முடக்கும் நடவடிக்கையில் சில யாழ் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்,
இவர்கள் சாவகச்சேரிச் சிறுமியின் உடலைக் கூட மூன்று லட்சம் பெற்று கொண்டே ஒப்படைத்துள்ளனர், பெரும்பாலும் தனியார் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அரச மருத்துவமனைகளில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை” எனப்  பேராதனையில் மருத்துவராகக் கடமையாற்றி தற்போது தான் பிறந்த மண்ணுக்கு சேவையை வழங்க வந்துள்ள டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
இப்பதிவுகள் அவருடைய முகநூல் பதிவிலும் காணொலியாக உள்ளது. இவர் யூன் 14 அன்று பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று வந்தார்.

தமிழகத்தில் பிறந்து 15 வயதில் இலங்கை திரும்பிய பெண் மீண்டும் தமிழகத்தில் தஞ்சம்

தினமணி : தமிழகத்தில் விருது நகர் மாவட்டம் வேம்புக்கூட்டை அகதி முகாமில் பிறந்து 15 வயதில் இலங்கை திரும்பிய பெண் அங்கு வாழமுடியாது என மீண்டும் தமிழகத்தில் தஞ்சம்
இரண்டு பிள்ளைகளுடன் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கைப் பெண்!!
தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தமிழகத்திற்கு தஞ்சம் தேடி சென்றுள்ளனர்.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி (வயது 34),அவரது பிள்ளைகளான அனுஜா (வயது 08),மிஷால் (வயது 05) ஆகியோர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.

முன்னாள் புலி இயக்க உறுப்பினர் மர்ம மரணம்! மன்னார் "கம்பிகளின் மொழி பிரேம்"

 வீரகேசரி : மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (05) வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பல்துறை ஆளுமை மிக்க ‘கம்பிகளின் மொழி பிறேம்’ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் (வயது-42) என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.