hindutamil.in : சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான மே.4 அன்று சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த மனுவில், “2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, பாரதிய ஜனதா கட்சியும் , அக்கட்சியின் தூண்டுதலின் பேரில் செயல்படும் பிற அரசியல் கட்சிகளும் இணைந்து, வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பங்களை விளைவிக்கத் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
ஞாயிறு, 3 மே, 2026
ஆர் எஸ் பாரதி : வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் விளைவிக்க பாஜக திட்டம்!
வேடசந்தூர் தொகுதி : ஆண்டுகளாக அரியணை ஏறும் கட்சியை அடையாளம் காட்டும் தொகுதி!
dinamalar.com : தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் இருந்தாலும் பெல்வெதர் தொகுதியான வேடசந்தூர் தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி தான் அரியணை ஏறும். இந்த உண்மை 2026 தேர்தலிலும் தொடருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. அனைத்து முன்னிலை விவரங்கள், ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் அதன் பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட இருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கட்சித் தலைவர்களின் தொகுதிகள், முக்கிய கட்சிகளின் பாரம்பரிய தொகுதிகள் இருந்தாலும் ஒரேயொரு தொகுதியை தான் அனைத்து கட்சிகளும் உற்று நோக்கி வருகின்றன.
OCI Card வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் அட்டை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்? என்ன ஆவணங்கள் தேவை?
ilakkiyainfo.com : வெளிநாட்டு வாழ் இந்திய குடிமக்கள் கார்ட் என்பது என்ன? அதனை எப்படி பெற்றுக்கொள்வது? அதற்கான ஆவணங்கள் என்ன? என்பது போன்ற விடயங்கள் கேள்வி பதில் வடிவில் தரப்படுகிறது.
இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் வெளிநாட்டு வாழ் இந்திய பிரஜைகள் அட்டையை பெற்றுக் கொள்வதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் வெளிநாட்டு வாழ் இந்திய பிரஜைகள் அட்டை என்பது என்ன? அதனை எப்படி பெற்றுக்கொள்வது? அதற்கான ஆவணங்கள் என்ன? என்பது போன்ற விடயங்கள் கேள்வி பதில் வடிவில் தரப்படுகிறது.