vikatan.com - -vijayanand.a" :
கடந்த வாரம்கூட பொதுச் செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து
நீண்டநேரம் பேசினார் இசக்கி. அப்போதுகூட இப்படியொரு முடிவில் அவர் இருப்பது
குறித்து யாருக்கும் தெரியவில்லை. அசோக் நகரில் உள்ள கட்டடமானது, 35
மாதகால குத்தகை அடிப்படையில் இயங்கி வருகிறது. அதற்கு முறையாகப் பணம்
செலுத்தியிருப்பதால் தொடர்ந்து அலுவலகம் செயல்படுவதில் தடங்கல் இல்லை.
``தமிழக அரசில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வருகிறார் இசக்கி சுப்பையா. அ.ம.மு.க-வில் இணைந்த பிறகு, இந்தப் பணிகளுக்காகச் சென்று சேர வேண்டிய பில்களைக் கிடப்பில் போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. உள்ளாட்சித்துறையில் ஏராளமான பணிகளை எடுத்துச் செய்து வந்தார். அந்தவகையில் சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அரசு தரப்பிலிருந்து கொடுக்க வேண்டியுள்ளது. தினகரனோடு சேர்ந்துகொண்டு அ.தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததால், அடுத்தடுத்த ஒப்பந்தப் பணிகளில் புறக்கணிக்கப்பட்டார் இசக்கி சுப்பையா.
இசக்கி சுப்பையா விலகல் குறித்துப் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ``கட்சியைவிட்டு வெளியே போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவை. இசக்கி சுப்பையா பெரிய கான்ட்ராக்டர். அவருக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய தொகைகள் அதிகம் உள்ளன. வேலுமணி அதிகப்படியான தொல்லைகளைத் தருகிறார் எனச் சொல்வார். நாங்கள் இப்போது தோல்வியடைந்ததால் அவர் போகலாம். எங்களுக்கு இது பின்னடைவா என்பதை வருங்காலம் முடிவு செய்யும். ஏற்கெனவே இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ-வாக இருந்தவர். 48 நாள் ஒரு மண்டலத்துக்கு அமைச்சராக இருந்தவர். அவர் யாரைக் குறை சொல்கிறாரோ, அவர் சொல்லித்தான் இசக்கி சுப்பையாவுக்குப் பதவி கொடுத்தோம். எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எங்களை எதிர்ப்பதால் நாங்கள் அழிந்துபோய்விட்டோமா. பன்னீர்செல்வமும் எங்களை எதிர்ப்பதால் அழிந்துபோய்விட்டோமா. எங்களால் கை காட்டப்பட்ட நிர்வாகிகள் வேறு இடம் தேடிப்போவதால் இன்னும் வலுவடைவோமே தவிர பாதிக்கப்பட மாட்டோம்" என்றார் ஆவேசத்துடன்.
தினகரனின் பேட்டியைக் கவனித்த இசக்கி சுப்பையா, ``தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. ஒரு தலைவருக்கு அழகல்ல. அவர் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் ஈர்க்கப்பட்டுத்தான் கட்சிக்கு வந்தோம். ஜூலை 6-ம் தேதி அ.தி.மு.க-வில் 20,000 தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய்க் கழகத்துக்கே செல்கிறோம்" என விளக்கமளித்தார்.
இசக்கி சுப்பையா `மன மாற்றம்' குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ``தி.மு.க-வை விட்டு வைகோ விலகியபோது ஏராளமான மாவட்டச் செயலாளர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர். `இனி தி.மு.க அவ்வளவுதான்' எனப் பேசினர். ஆனால், முன்பைவிட வலுவாக அரசியல் களத்தில் தி.மு.க மீண்டெழுந்தது. அதைப்போலத்தான் இந்த இயக்கத்திலிருந்து யார் விலகினாலும் அ.ம.மு.க இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்கும். அ.ம.மு.க-வில் இருப்பதால் இசக்கி சுப்பையாவின் எதிர்கால ஒப்பந்தப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கருதுகிறார். அவரது ஒப்பந்தப் பணிகள் சிறக்க எங்களுடைய வாழ்த்துகள்" என்றார் நிதானமாக



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக