ஞாயிறு, 9 டிசம்பர், 2018

மூக்குபொடி சித்தர் காலமானார் . ,, தினகரனின் ஆஸ்தான குறி பார்ப்பாளர்

Samayam Tamil  : டிடிவி தினகரனின் ஆஸ்தான குருவான மூக்குபொடி சித்தர் காலமானார்
ttv dinakaran’s guru tiruvannamalai mooku podi siddhar died at age 62
 டிடிவி தினகரனின் ஆஸ்தான குருவான வணங்கி வரும் மூக்குபொடி சித்தர் இன்று காலை காலமானார். திருவண்ணாமலையில் பிரபலமானவர் மூக்குப் பொடி சாமியார். அவர் பிரபலத்திற்கு மற்றொரு காரணமும் உள்ளது அது தான் டிடிவி தினகரன். திருவண்ணாமலை கோயிலில் பல சாமியார்கள், ஆன்மிக குருக்கள் வாழும் ஒரு இடமாக இருக்கின்றது. அந்த வகையில் திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் அமைந்துள்ள ஷேசாத்திரி ஆஸ்ரமத்தில் வசித்து வந்தவர் தான் மூக்கு பொடி சித்தர். இவரின் அருளைப் பெற அமமுக.,வை சேர்ந்த டிடிவி தினகரன் அடிக்கடி நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்தார்.
சித்தரின் ஆஸ்ரமத்திற்கு சென்று தியானம் செய்வது வழக்கமாக வைத்திருந்தார்.
மூக்குபொடி சித்தர். மூக்குபொடி சித்தர் சொல்வது தான் என் வேத வாக்கு என்பது போல் டிடிவி தினகரன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூக்குபொடி சித்தர் கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்து சென்ற போது தடுக்கி விழுந்ததாகவும், அப்போதிருந்து அவர் உணவு எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும், உடல் நிலை தேறுவதில் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 5.30 மணி அளவில் மூக்குபொடி சித்தர் இறைவனடி சேர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக