திங்கள், 13 பிப்ரவரி, 2017

கூவதூரை விட்டு வெளியே வா, இல்லேன்னா வீடுகளில் ரெய்டு: கதறும் M.L.Aக்கள்

இன்று மாலை வரை உங்கள் அனைவருக்கும் டைம் தருகிறோம். என்ன செய்வீர்களோ தெரியாது. சொகுசு ரிசார்ட்டில் கூத்தடிப்பதை நிறுத்தி விட்டு அனைவரும் வெளியே வாருங்கள் இல்லையேல் உங்களிடம் பத்து பைசா மிஞ்சாது. இப்படி ஒரு தகவல் கூவத்தூர் கோல்டன் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள சசி தரப்பு எம்.எல்.ஏ களுக்கு தகவல் போய் சேர்ந்துள்ளது. அவ்வளவுதான் ஆடிப்போய் விட்டார்கள் அவர்கள். நேற்று இது குறித்து நேரில் சென்ற சசியிடம் சொல்லி அம்மா எங்களை விட்ருங்க. நாங்க அணி மாற மாட்டோம், சத்தியம்மா என்று சின்னமாவிடம் கதறினார்கள் உறுப்பினர்கள். ஆனால், சசிகலா தரப்போ அப்படி எதுவும் நடக்காது. நான் இருக்கிறேன். உங்களை பாதுகாப்பேன். இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் பொறுங்கள். நல்ல பதில் வரும். உங்களுக்கும் நல்ல பதவி கிடைக்கும் என்று சசி கூறினாராம். ஆனால், இதில் திருப்தி அடையாத சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரை கையில் பிடித்தபடி இருக்கிறார்கள் லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக