திங்கள், 13 பிப்ரவரி, 2017

உடையும் தறுவாயில் கலிபோர்னியா அணை... மக்கள் வெளியேற உத்தரவு!

அமெரிக்கா கலிபோர்னியாவில் இருக்கும் ஓரோவில் அணை (Oroville Dam) உடையும் தறுவாயில் இருப்பதால், அணைக்கு பக்கத்தில் இருப்பவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓரோவில் அணையின் 50 ஆண்டு கால வரலாற்றில் இதைப் போன்று மக்கள் அவசர அவசரமாக வெளியேறச் சொல்வது இதுவே முதல் முறையாம். இதுதான் அமெரிக்காவில் இருப்பதிலேயே மிக உயரமான அணை என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கலிபோர்னியாவில் மிக அதிக மழை பொழிந்து வருகிறது. இதனால், ஓரோவில் அணையில் இருந்து அதிகப்படியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அணை பலவீனமடைந்து உடையும் தறுவாய்க்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக