திங்கள், 13 பிப்ரவரி, 2017

கூத்தடித்து கொண்டிருக்கும் அமைச்சர்களுக்கு ஆப்பு ... தலைமை செயலகம் செல்லும் பன்னீர்செல்வம்!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி சண்டையால் சசிகலா அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களை கூவத்தூரில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகம் செல்கிறார். இதனையடுத்து கூவத்தூரில் இருக்கும் அமைச்சர்கள் பதற்றத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக வீட்டிலே இருந்தபடி ஆட்சி நிர்வாகத்தை கவனித்து வந்தார். இதனைதொடர்ந்து இன்று தலைமை செயலகம் சென்று தனது பணியை கவனிப்பார் என்று தலைமை செயலக வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. முதல்வர் தலைமை செயலகம் சென்றுவிட்டு செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதால், அப்போது செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள். நீங்கள் மட்டும் வேலை செய்கிறீர்கள் மற்ற அமைச்சர் ஏன் மக்கள் பணி செய்யவில்லை என்று கேள்வி கேட்க வாய்ப்புள்ளது.
இதனால் ஓபிஎஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம். இந்த பிரச்சனையை மக்களிடமே விட்டு விடுகிறேன் என்று பதில் சொல்ல வாய்ப்புள்ளது. இதனை எதிர்பார்க்காத மற்ற அமைச்சர்கள் மக்கள் பணி செய்யவில்லை என குற்றச்சாட்டு வந்தால் அதனை எப்படி சமாளிப்பது என்று கூவத்தூரில் சோகத்துடன் இருக்கின்றார்களாம். இதனால் மற்ற அமைச்சருக்கு மறைமுகமாக ஆப்பு வைக்கிறார் என்று அரசியல் விமர்சகர் கூறுகின்றனர். லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக