திங்கள், 6 பிப்ரவரி, 2017

For Sale ? பல கோடி பேரம் ஜெ.தீபா, விலை போகிறார்! டம்மி கட்சியை காட்டி பணம் பொருள் ...

ஜெ.சாவில் மர்மம் இல்லை என்று சொன்னவர்தான் இந்த ஜெ.தீபா. கொஞ்சம் நன்றாக நாம் யோசிக்க வேண்டும் தமிழர்களே..! சசியை எதிர்த்து அரசியல் பண்ண வேண்டும் என்று தீபா முடி செய்திருந்தால் ஜெ. மரணம் அடைந்த ஒரு மாதத்திற்குள் தீபா புயல் போல கிளம்பி இருக்க வேண்டும். தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று அத்தையின் சாவுக்கு நீதி கேட்டிருக்க வேண்டும். மக்களை திரட்டி போயஸ் கார்டனில் பெரிய போராட்டத்தில் இறங்கி இருக்க வேண்டும். மீடியாக்களிடம் அழுது புலம்பி இருக்க வேண்டும். தனது அத்தையின் மீது தீராத பாசம் கொண்ட தொண்டர்கள் தீபா வீட்டின் முன் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்த போதே தனக்கான அரசியல் பாதையை திடப்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால், பொத்தாம் பொதுவாக ஒரு ப்ரஸ் மீட் வைத்து வழவழா என்று ஒரு பேட்டி கொடுத்து விட்டு, பிப்ரவரி மாதம் அத்தையின் பிறந்த நாளில் நல்ல சேதி சொல்வேன் என்று கூறி விட்டு தலைமறைவு ஆகிவிட்டார் தீபா.

நேற்று முதல்வர் சசிகலா சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டபோதும் மக்கள் மன்றத்தில் பொங்கி இருக்கலாம். ஆனால் ஒரு அறிக்கை கூட வர வில்லை.
இப்போது எதிர்க்காத தீபா வேறு எப்போது எதிர்ப்பார்?
வேறு போராட்டக் களம் எது? மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் இந்த நேரம் தானே அரசியல் செய்யும் நேரம்?
நடராஜன் வேறு, தீபா எங்கள் வீட்டுப் பெண் என்று சொல்லியபடியே இருக்கிறார்.
அரசியல் வல்லுனர்கள் சொல்வது இது ஒன்றுதான். கொடநாடு எஸ்டேட்,அல்லது போயஸ்கார்டன் வீடு, பையனூர் பங்களா, ஜாஸ் சினிமா இதில் ஏதாவது ஒன்று தருவதாகவோ அல்லது பல கோடிகள் தருவதாக ஒரு பேரம் நடந்து, கிட்டத்தட்ட பைனல் ஆகிக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை கட்சியே ஆரம்பித்தாலும் அது ஒரு டம்மிக் கட்சியாகவே இருக்கும் என்கிறார்கள். தமிழர்களே…மாணவர்களே..எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக