திங்கள், 6 பிப்ரவரி, 2017

சசிகலாவை காப்பாற்ற பிரதாப் ரெட்டியின் ஏற்பாட்டில் லண்டன் டாக்டர் வருகிறார் !

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பேல் இன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வராகவும், அதிமுக-வின் பொதுச் செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள #ApolloHospitals அப்பல்லோ மருத்துவமனையின் கிரிட்டிக்கல் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதியன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் சர்ச்சைகள் ஓய்ந்த பாடில்லை. கொலை, கால்கள் இல்லை, எம்பார்மிங், சித்தரவதை, என்று பல கேள்விகள் இருக்கிறது. அதற்கு சரியான ஆதரங்களுடன் ரெட்டியும்..லண்டன் டாக்டரும் பதில் அளிப்பார்கள் என்பது சந்தேகம் என்கிறார் பேராசிரியர் ஜான்துரை. சசி ஒன்பதாம் தேதி முதல்வராக பதவி ஏற்கப் போகிறார். அதற்குள் கொலை எனும் பழியை துடைக்க நடக்கும் ஒரு கண் துடைப்பு நாடகமே, இந்த பிரஸ் மீட் என்றும் கூறுகிறார். அப்படியானால் மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்ய சசிகலா ஒப்புக் கொள்வாரா என்கிறார். பொய் சொல்றதுக்கு எதுக்கு லண்டனில் இருந்து பிளைட்ல வரணும்..? லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக