![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_rB5OaI0O74w5nzDYp8GhhCXVSBL1LYNAsAEI39mHDCdo7P3WrZCy-P5hGqfT-M-RMnFMru0zZa7eOsWHWh4mEYkCk2pSraENtJt-awts9RS5fY9w07rTgEQE5uQGAaVH-4ut0daraSU/s280/16707500_1789843531336378_701439412777849818_o.jpg)
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்ற பிறகு கூவத்தூர் வந்து இந்த 18 எம்எல்ஏக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. என்றாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் இன்று காலை 7 மணி முதல் அவர்கள் 18 பேரிடமும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்யும் முயற்சி ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாளை கூடவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தில் இந்த 18 எம்எல்ஏக்களும் பழனிச்சாமிக்கு ஆதரவளிப்பார்களா அல்லது நடுநிலை வகிப்பார்களா அல்லது பகிரங்கமாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்று அறிவித்துவிடுவார்களா என்பது நாளைதான் தெரிய வரும்.
இதனிடையே, நேற்று பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றுவிட்டு கூவத்தூர் மீண்டும் சென்ற போது, அப்பகுதி மக்கள் சாலையில் நின்று பழனிச்சாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூவத்தூர் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பைக் கட்டுப்படுத்த ரிசார்ட் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 4வது நாளாக தொடர்ந்து இன்றும் 144 தடை உத்தரவு அந்தப் பகுதியில் அமலில் உள்ளது. போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் அதே வேளையில், சசிகலா உறவினர்களால் போடப்பட்டுள்ள தனியார் பாதுகாப்பு குழுவினரும் ரிசார்ட்டை சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ரிசார்ட்டுக்குள் யாரும் சென்றுவிட முடியாத அளவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றன tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக