மீனவன் இல்லை என்றால் மாணவன் இல்லை’
மீனவர் பாதுகாப்பு இல்லை என்றால் நேற்று மாணவர் போராட்டம் இல்லை. மாணவர் மீது விழ வேண்டிய அடிகள்தான் மீனவர் மீது விழுந்தது.
‘போலிஸ்காரர்கள் விரட்டும்போது ஓடாத நில்லு’ என்று மாணவர்களுக்குப்
போராட்ட முறையைச் சொல்லித் தந்தது, மாணவர் மத்தியில் ஊடுருவிய உளவுத்துறையை
அடையாளம் காட்டி. கடல் வழியாகத் தண்ணீரும் உணவும் தந்து
காத்திருக்கிறார்கள்.
மீனவப் பெண்கள் மாணவிகளுக்குப் பாதுகாப்பாகத் தொடர்ந்து கடற்கரையில்
இருந்திருக்கிறார்கள். மதியம் மூன்றரை மணிக்கு மீனவ தாய்மார்கள், ‘எங்க
குழந்தைகள் ஸ்குலிலிருந்து வந்திடுவாங்க. நாங்க போயிட்டு வரோம்’ என்றபோது
மாணவிகள், ‘அக்கா போகாதீங்க அக்கா.. நீங்க போயிட்டா அவுங்க எங்கள
அடிப்பாங்க அக்கா..’ என்றதும் கலங்கிய மீனவ வீர மங்கைகள் தங்கள்
குழந்தைகளையும் விட்டுவிட்டு மாணவிகளோடு தொடர்ந்து
துணையிருந்திருக்கிறார்கள்.மீனவ குடியிருப்புகளில் போலிஸ் நுழைந்து தங்களைத் தாக்கியபோதுகூட, காலையில் மாணவர் மீது நடந்த தடியடியை, தங்கள் குழந்தைகள் மீது நடந்ததைபோல் பொங்கி பேசினார்கள். மயிலையில் ரூதர்புரம் தலித் மக்கள் மீதும் அவர்கள் உடமைகள் மீது நடந்த கொடூர தாக்குதல், மாணவர்களுக்காக எம் மக்கள் சுமந்த சிலுவை. இப்படித் தியாக உணர்வோடு போராடிய எம் மீனவ, தலித் மக்களைத்தான் (ரஜினி போன்றவர்கள்) நடிகர்களும், பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் ‘சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள்’ என்று ஜாடைமாடையாக சொல்கிறார்கள். இது காவல் துறை நடத்திய வன்முறையை விடக் கொடூரமானது. மாணவர்களே, உங்களைக் காப்பாற்றிய மக்களை மறந்து விடாதீர்கள்.< உழைக்கும் மக்கள் நீங்கள் உதவி செய்வீர்கள் என்பதற்காகப் போராட வில்லை. அது அவர்களின் இயல்பு. அந்த இயல்பை எம் மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் அவர்களுக்காகப் போராட வேண்டியதும் உங்களின் இயல்பாக மாற்றிக் கொள்ளுங்கள். அதன் துவக்கமாக, எம் மக்களை நேரில் சந்தித்து நன்றி சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் போரட்டம் முழு வெற்றிப் பெற்றதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக