திங்கள், 26 டிசம்பர், 2016

சபரிமலை மகரஜோதி மோசடி அம்பலம் ... கூட்ட நெரிசலில் சிக்கி 21 முட்டாள் பக்தர்கள் காயம்: 2 பேர் கவலைக்கிடம்


சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பொன்னம்பல மேடையில் தானாகவே எரியும் மகரஜோதி என்பது ஒரு மிகப்பெரும் மோசடியாகும். சபரிமலை தேவஸ்தான ஜீப்பில் கோவில் ஊழியர்கள் பொன்னம்பல மேட்டுக்கு  இரகசியமாக வருவார்கள். அங்கு உள்ள  மலைமீது உள்ள ஒரு குன்றில் கற்பூரத்தையும் எண்ணையையும் கலந்து நெருப்பு ஏற்றுவார்கள். இதைதான் தானாகவே பொன்னம்பல மேட்டில் எரியும் மகரஜோதி என்று கூறி தமிழர்களையும் தெலுங்கர்களையும் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் . ஜோதியை தேடிசெல்பவர்கள் தானாகவே இறந்துவிடுகிறார்கள் என்று கதை கட்டி விடுகிறது சபரி மலை நிர்வாகம் ,உண்மையில் அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் . பணத்துக்காக கேரளா அரசும் ஐயப்பன் கோவில் நிர்வாகமும் செய்யும் மோசடிகளை தமிழர்கள் இனியும் நம்பி ஏமாறுவது மிகவும் வேதனையாகும். இதுபற்றி நக்கீரன் மட்டும் அல்ல மேலும் பலர் பலதடவைகள் எழுதியும் விடியோ ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தி உள்ளார்கள். ஆனாலும் ஏமாறுவதில் உள்ள ஒரு போலி சுகத்திற்காக தமிழர்கள் தொடர்ந்து ஏமாறுகிறார்கள்
இந்த பித்தலாட்டங்களை புரியாமல் சபரிமலை ஐயப்பசாமி கோவிலில் மக்கள்  கூட்டம் அதிகரித்துள்ளது. வழமை போல இந்த முறையும் பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நரிசலில் சிக்கி 21 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் 2 பக்தர்கள் கடுமையான காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தேசிய மீட்புப் பட விரைந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக