வெள்ளி, 4 நவம்பர், 2016

பிரதாப் ரெட்டி : ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். நம்புறோம் சாமியோவ்

உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் ஜெ.வின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு மருத்துவராலோ, மருத்துவமனையாலோ இந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சி. தன்னை சுற்றி நடப்பதை உணர்ந்து வருகிறார். பொதுமக்களின் பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்துள்ளது. தற்போதுள்ள அறையில் இருந்து வெளியே வருவதும், வீடு திரும்புவதும் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, அவரே முடிவு செய்வார். சிறப்பாக முன்னேறி வருகிறார். இவ்வாறு கூறினார்.நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக