ஒரு
வீடு கட்டுவதற்கான முறையான அனுமதியைப் பெறுவதற்கே தாவு தீர்ந்து விடுகிறது
சராசரி மக்களுக்கு. ஆனால் ஏகப்பட்ட விதி முறைகள் கொண்ட வனப்பகுதியிலும் மலை
கிராமத்திலும் ஏறத்தாழ 5 லட்சம் சதுர மீட்டர் (சுமார் 15 லட்சம் சதுர அடி)
பரப்பளவில் மிகப் பெரிய வளாகத்தை அமைத்திருக்கிறது ஈஷா யோகா மையம். அதன்
மீது பல்வேறு புகார்கள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில், மையம்
கட்டப்பட்டிருப்பதிலேயே பெரும் முறைகேடுகள் உள்ளன என்கிறார்கள் இயற்கை
ஆர்வலர்கள்.>கோவை பூண்டி
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 400 ஏக்கர் பரப்பில் அமைந் திருக்கிறது ஈஷா
யோகா மையம். இதன் பின்னணி குறித்து சமூகஆர்வலரான சிவாவும், இயற்கை
ஆர்வலரான யோகநாதனும் நம்மிடையே விரிவாகப் பேசினார்கள் ""1990களின்
தொடக்கத்தில் இந்த இக்கரை போலுவாம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில்
குடியேறிய ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ் இங்குள்ள பாமர மக்களிடம் பேசி,
விவசாய நிலங்களை வாங்கி மையத்தைத் தொடங்கிவிட்டார். அதன்பின் 26-11-1999ல்
தியானலிங்கத்தை நிறுவி, இதனை ஆன்மிகத்தலமாக மாற்றிவிட்டார். சத்குரு என்ற
பட்டத்துடன் பிரபலமானார்.
மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி, கடஆ விடம் இருந்து யானை வழித்தடங்களில் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டாலும் ஐஆஈஆ (ஐஒகக ஆதஊஆ ஈஞசநஊதயஆபஒஞச ஆமபஐஞதஒபவ) அதாவது மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் இருந்து அனுமதி வாங்கியாக வேண்டியது கட்டாயமாகும். அந்தக் குழுவில் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள், மாவட்ட வன அதிகாரி, மாவட்ட ஆட்சியர் என உயரதிகாரிகள் வரை இடம் பெற்றிருப்பார்கள். இந்தக் குழுவிடம் அனுமதியே பெறாமல் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஈஷா யோக மையத்தில் பல கட்டடங் களை கட்டிக்கொண்டார் ஜக்கி. அத்தனையும் மலை கிராமம் மற்றும் யானைத்தடத்தில் உள்ள வனப்பகுதி. இதனால் மக்களுக்கும் மற்ற உயி ரினங்களுக்கும் பெரும் பாதிப்பு'' என்றனர் அவ்விரு வரும்.
>ஈஷா தரப்பில் இந்தப் புகார்களை மறுக்கும் நிலையில். விதிமீறல் குற்றச்சாட்டுகளில் எந்தளவு உண்மை இருக்கிறது என்ற புலனாய்வில் இறங்கிய போது ஒன்றன்பின் ஒன்றாக சாட்சியங்கள் அணிவகுத்தன.
>அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு, 17-08-2012-ல் அப்போது மாவட்ட வன அதிகாரியாய் இருந்த திருநாவுக்கரசு, சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பினார். அதில்... ஈஷா சார்பாக 42.77 ஹெக்டர் பரப்பளவில் ஈஷா யோகா மையத்தினரால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 63,380 சதுர மீட்டர் பரப்பளவு கட்டடங்களுக்கும், கட்ட உத்தேசிப்பதாக ஈஷா அறக்கட்டளை யினரால் விண்ணப்பம் மட்டும் அளிக்கப் பட்டுள்ள 28,582.52சதுர மீட்டர் பரப்பளவு கட்டடங் களுக்கும் மலைத்தல பாது காப்பு குழுவின் அனுமதி பெறும் பொருட்டு, வனத் துறையின் தடையில்லா சான்று கோரி ஈஷா அறக்கட்டளையினர் 06-07-2011ஆம் தேதி கடிதம் வாயிலாக விண்ணப்பித்துள்ளதை அந்த அதிகாரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். >மேலும் அக்கடிதத்தில், மலைத்தல பாதுகாப்புக் குழு வினரின் அனுமதியின்றி ஊராட்சியின் அனுமதி அளிக் கப்பட்டதற்கான விவரத்தை அறிய இயலவில்லை என்றும், யானைகள் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளதால் ஈஷா மையத்திற்கு அருகிலுள்ள வனத்தில் வாழும் யானைகளின் இயல்பு வாழ்க்கைக்கு அதிக இடையூறு ஏற்பட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினால் ஏற்படும் சேதத்தை தடுப்பது இயலாத காரியமாகும் என்றும் தெரிவித்து, கட்டடங்களுக்கு அனுமதி தரக்கூடாது எனப் பரிந்துரைத்துள்ளார். >ஈஷா அமைப்போ இக்கரை போலுவாம் பட்டி ஊராட்சி அனுமதியைப் பெற்றுவிட்டு, வனத் துறை மற்றும் இதர அனுமதிகளுக்கு விண்ணப்பித்திருப்ப தாக இன்றுவரை சொல்லி வருகிறது. மொத்தமுள்ள 4,27,700 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்கள் கட்டப்படுவதை நிறுத்தும்படி போலாம்பட்டியின் வனச் சரகத்திலிருந்து மாவட்ட வனத்துறைக்கு பல முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 19-01-12 அன்று போலாம்பட்டி வனச்சரக அலுவலர் அனுப்பிய கடிதத்தில் ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள புலங்கள் சாடிவயலிலிருந்து தாணிக்காண்டிக்கு யானைகள் செல்லும் முக்கியமான வழித்தடத்தில் அமைந்துள்ளது என்றும், இதனால் யானைகள் காட்டை விட்டு வெளியேறி விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன. அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டடங்களாலும் ஈஷா அமைத்துள்ள மின் வேலியாலும் வனத்திற்கும் வன உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டு, ஈஷா கட்டடங்களுக்கு அனுமதி தரவேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். >
t;சான்று 3 கோவை மண்டல நகர் ஊரமைப்புத் துறை இயக்குநருக்கு மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு 22-2-2013இல் எழுதிய கடிதத்தில், விதிமீறல்களுடன் கூடிய வரைபடத்தை முறையாகத் திருத்திக் கொண்டு வந்து அனுமதி கோருவதாகத் தெரிவித்த ஈஷா மையம், சொன்ன தேதியில் அதனை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன், தாணிக்காண்டி மலை வாழ் மக்கள் பயன்படுத்தும் சாலையை ஈஷா பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள 18-2-2008இல் அரசு அனுமதி தரப்பட்டிருப்பதையும் (முறைகேடு) சுட்டிக்காட்டி யுள்ளார்.
> >சான்று 4 மற்றும் >ஈஷா மையத்தில் அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கான பணிகளை நிறுத்தச்சொல்லி, வேலை நிறுத்த உத்தரவு 5-11-2012இல் கோவை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்
">சான்று 7
>இதன்பிறகும்
கட்ட டப் பணிகளை ஈஷா நிறுத்தவில்லை என்பது 17-11-14 அன்று அதிகாரிகள்
மீண்டும் நேரடியாக ஈஷாவுக்கு சென்று ஆய்வு செய்தபோது உறுதியானது.
தியானலிங்க கோவில், சிவபாதம் கட்டடங்கள் உள்ளிட்டவை அனுமதி யின்றி
கட்டப்பட்டிருப்பதையும் மேலும் பல பணிகள் நடப்பதையும் அவர்கள்
கண்டறிந் தனர். இதனையடுத்து, ஈஷா மைய பொறுப் பாளர் சுவாமி ஏகா
என்பவருக்கு 26-11-14 அன்று நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் க.மூக்கையா
அனுப்பிய கடிதத்தில், "அனுமதியற்ற கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும்' என
இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார். />
>சான்று 8 மற்றும் 9
;அத்தனைக்கும் அல்வா கொடு! >ஈஷாவின் பக்தர்களாக முன்னாள் -இந்நாள் அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரதமர் அலுவலகம் வரை செல்வாக்கு உள்ளது. ஆண்ட -ஆளும் -ஆள ஆசைப்படும் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதி களில் தொடங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஊடக ஆதரவு என ஈஷாவின் நெட்வொர்க் மிகப்பெரியது. அதனால் வனத்துறையோ மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க முயன்றால் தனது மேல்மட்ட செல்வாக்கு மூலம் எல்லாத் தரப்பையும் சரிக்கட்டி அல்வா கொடுத்துவிடுகிறது ஈஷா.>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக