![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjZgnMJCQrR-gn0qULVXO_IQtaiv2AADKQ-X_0KeAsqn1fZuJSKnKwQo4lq8imU6C0yWAq6iHxObPk22E3nQYYLLpW6iyPtO7l3X9tovkg2POfWxu2oYnL1gHUXh12d8AMegk1Hr3OMSk/s280/1448468932-7523.jpg)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க பட்ட மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மாளவியா, சிபிசிஐடி போலீஸார் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், அவருடன் எனக்கு ஏற்பட்ட காதல் பிரச்சனையால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று என்னை ஒத்துகொள்ள சொல்லி சிபிசிஐடி போலீஸார் நெருக்கடி செய்கின்றனர் என்ற குற்றசாட்டை ஏற்கனவே, வழக்கறிஞர் மாளவியா ஊடகங்கள் வழியாக கூறியிருந்தார். இந்நிலையில், சிபிசிஐடி நெருக்கடியால் அவர் இன்று மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அவரை வீட்டில் அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். தற்பொழுது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது webduniya.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக