செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

சிலுவையில் தன்னை தானே அறைந்த ஹுசெனிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி ஊக்குவித்தார் !

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கராத்தே வீரர் ஹூசைனிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நான் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவதற்காக, நீங்கள் உங்களை வருத்திக்கொண்டு சிலுவையில் அறைந்து கொண்ட செயல், என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்தாலும், எல்லையை தாண்டி இதுபோன்று உங்களை வருத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்னிடம் காட்டிய கருத்தினைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய வாழ்க்கைக்கு அபாயகரமான நடவடிக்கைக்கைக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்  இது எப்படி இருக்குது தெரியுமா ஆபாசமாக ப்ளூ படம் எடுப்பவர்கள் காட்டவேண்டியதை எல்லாம் காட்டி விட்டு இறுதியில் ஒரு மசேஜ் சொல்லி தங்கள் ஆபாச படத்துக்கு ஒரு மோரல் கிரவுண்டு காட்டுவார்கள் . பேசாமல் இந்த ஆளை பிடித்து ஜெயிலில் போடவேண்டும், ஒரு நேர்மையான அரசாங்கமும் தலைவரும் அதைதான் செய்யவேண்டும்,

2 கருத்துகள்: