ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்றால் என்ன?
இந்தியாவில் பல ஏழை மக்கள் உணவுக்காக தடுமாறுவதால் அதனை தடுக்கும் நோக்கத்துடன் அருகில் இருக்கும் உணவு தேவைப்படும் ஒருவருக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தர வேண்டும். இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் உங்களது நண்பர்களை டேக் செய்ய வேண்டும். இதனை # குறியீட்டுடன் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்று ட்ரெண்ட் செய்ய வேண்டும். இதுவே ரைஸ் பக்கெட் சேலஞ்ச் ஆகும்.
ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா என்பவர் இதற்காக சமூக வலைதளங்களில் தனி பக்கத்தை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 24ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல் இந்தியாவில் வைரலாக தொடங்கியுள்ளது.தேசிய மக்களின் தேசிய தேவை என்ற டேக் வார்த்தையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மூலம் ஒருவரது உணவு தேவை நிறைவேற்றப்படுகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்சில் தண்ணிர் தேவையில்லாமல் வீணாக்கப்படுவது போல் இதில் இல்லை என்று சமூக ஆர்வளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை எந்த பிரபலமும் ரைஸ் பக்கெட் சேலஞ்சை செய்ததாக பதிவு செய்யவில்லை. சாதாரண மக்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் இதனை பதிய துவங்கியுள்ளனர். ரைஸ் பக்கெட் சேலஞ்சர்கள் கூறியதாவது இதில் பிரபலங்கள் களமிறங்கினால் நாட்டில் பெரும்பாலான மக்களின் உணவு பிரச்னை ஓரளவிற்கு தீரும்...dinakaran,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக