செவ்வாய், 13 செப்டம்பர், 2011

கிறீஸ் பூதம்’: ஊர்ப்பேயா? ஒண்ட வந்த பேயா? (சிறு ஆய்வு)

மர்ம மனிதன் அல்லது கிறீஸ் பூதம் என்று சொல்லப்படும் அச்சமூட்டும் விடயம் தொடர்பாக இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. மலையகப் பகுதியிலிருந்து ஆரம்பித்து, கிழக்கு மாகாணம், புத்தளம் வரையில் பரவி, இப்போது யாழ்ப்பாணத்தில் இந்த விடயம் சூடு பிடித்திருக்கிறது
அடிக்கடி கிராமங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் திடீரென மர்மமான முறையில் வரும் மர்ம மனிதர்கள் சமயங்களில் சில பொதுமக்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் செய்துவிட்டுத் தப்பியோடுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த கிறீஸ் பூதக் கதையை வைத்து, பெண்களில் மார்பகங்களை வெட்டி எடுக்கும் இரத்தம் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு நல்லாசி வேண்டி யாகம் செய்யப்படவிருப்பதாக வதந்திகள் பரவியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக