செவ்வாய், 13 செப்டம்பர், 2011

முதல் தமிழ் பெண் வேந்தர் யோகா இராசநாயகம் கிழக்கு பல்கலை வேந்தராக

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் வேந்தராக நியமிக்கப்பட்ட முதல் தமிழ் பெண் இவராவார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத் தலைவராக இருந்த முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ள இவர், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.
தமது பல்கலைக்கழக பணி வரலாற்றில் கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீட தலைவராகவும், பதில் துணைவேந்தராகப் பல தடவையும் கடமையாற்றியிருந்த இவர், ஓய்வுபெற்ற பின்னர், பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிலும் பொறுப்பான பதவி வகித்து வந்துள்ளார்.
தற்போது கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டதன் மூலம் வேந்தராக நியமிக்கப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக