திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கஸ்ரோ வின் சகா:வாணிகுமார் என்பவர் புலிகளியக்க உறுப்பினர்

புலிகளின் சர்வதேச பிரிவுத் தலைவர் கஸ்ரோ வின் சகா
சனல் 4 வானொலியில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் கருத்துக்களுக்கு வலுச்சேர்த்திருக்கும் வாணிகுமார் என்பவர் புலிகளியக்க உறுப்பினர் எனவும், அவர் கஸ்ரோ பிரிவில் இணைந்திருந்தார் எனவும், புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ரிவைஓ எனப்படுகின்ற இளையோர் அமைப்பின் பெண்கள் பிரிவுக்கான தலைவியாக அவர் செயற்பட்டார் எனவும் கஸ்ரோ தலைமையிலான புலிகளின் சர்வதேச பிரிவில் இயங்கிவந்த பிரபாகரன் எனும் புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அதற்கும் அப்பால் வாணிக்குமார் புலிகளியக்கத்தில் ஆயுதப்பயிற்சியை பெற்றிருந்தாகவும், அவர் லண்டனில் சந்தித்திருந்ததோர் விபத்துகாரணமாக முதுகுப்பகுதியில் காயமடைந்திருந்த காரணத்தினால் கடின இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சயனைட் குப்பி, தகடு என்பவற்றை பாவித்திருந்தார் எனவும் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் சர்வதேச பிரிவில் செயலாற்றும் காரணத்தினால் வெளியிடங்களுக்கு செல்லும் தேவை கருதி வரியுடை உடுத்தவில்லை எனவும் குறிப்பிடுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக