திங்கள், 8 ஆகஸ்ட், 2011

உயிர்தப்ப முனைந்த மக்களைச் சுட்டுக்கொன்றார்கள்.வைத்தியர் சத்தியமூர்த்தி

வைத்தியர்
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வைத்தியர்கள் யாவரும் வைத்தியசாலைகள் திட்டமிட்டவகையில் தாக்கப்பட்டதென தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துரைத்துள்ளதுடன் , புலிகளின் தலைமையினால் சர்வதேசத்திற்கு தவறான செய்திகளை வழங்க தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், சில சந்தர்ப்பங்களில் புலிகள் தாம் தெரிவிக்காத விடயங்களைக்கூட தாம் தெரிவித்தாக புலிகளின் குரல் வானொலியூடாக பரப்புரை செய்ததாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.
மேலுமொரு வைத்தியர் கூறுகையில், புலிகள் தங்களை தாம் மக்களின் பாதுகாவலர்கள் எனக்கூறினார்கள், ஆனால் உயிர்தப்ப முனைந்த மக்களைச் சுட்டுக்கொன்றார்கள், இவ்விடயங்களை நான் எனது கண்களால் கண்டேன் என தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக