ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

344 கோடி ரூபா பெறுமதியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு

344 கோடி ரூபா பெறுமதியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் பாரியளவில் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் நடத்திய தேடுதல்களின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானத் தாக்குதல்களுக்கான ஏவுகணைகள், பீரங்கிக் குண்டுகள், தர்மோபெரிக், மோட்டார்குண்டு, ஆர்.பி.ஜீ, நிலக்கண்ணி வெடிகள், கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், குண்டுகள், அதி நவீன ராடார்கள், பல ரக துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக