புதன், 20 ஜூலை, 2011

அழகிரி மதுரை சிறையில் கொடைக்கானல் நகராட்சி தலைவரை சந்தித்தார்

மதுரை சிறையில் கொடைக்கானல் நகராட்சி தலைவரை சந்தித்தார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

நிலமோசடி புகாரில் சிக்கி, மதுரை சிறையில் இருக்கும் கொடைக்கானல் நகராட்சித்தலைவர் முகமது இப்ராகிமை, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சந்தித்தார்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள சுமார் ரூ. 40 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் பண்ணை வீட்டை அபகரிக்க முயன்றதாக, கொடைக்கானல் நகராட்சித் தலைவர் முகமது இப்ராகிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 20.07.2011 அன்று மதியம் 1.25 மணிக்கு மத்திய அமைச்சர் அழகிரி, முகமது இப்ராகிமை நேரில் சந்தித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக