ஞாயிறு, 12 ஜூன், 2011

ஜெயலலிதா வீட்டில் குழந்தை தொழிலாளர்களை வைத்துகொண்டு மாநிலத்தையே குழந்தை தொழிலாளர்கள்

ஜெயலலிதாவின் பங்களாக்களில்  முன்பு பல  குழந்தைத் குழந்தை தொழிலாளர்கள் இருந்துள்ளார்கள் அவர் இப்போதும் குழந்தைகளை வீட்டு வேலைக்கு வைத்துள்ளார என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும் 

குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  இதுகுறித்து குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச் செய்தியில் அவர் கூறியிருப்பது:  குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்தி அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நமது கடமை.  அறிவும், வலிமையும் பொருந்திய தலைமுறையாக உருவாக வேண்டிய ஆயிரக்கணக்கான குழந்தைகள், கடும் உடல் உழைப்பின் சுமையால் நசுக்கப்படுகின்றனர். இவர்களை உடல் உழைப்பின் நிர்பந்தத்திலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இயல்பான வளர்ச்சியை உறுதி செய்வது நமது தலையாய கடமை.  அவர்களின் உரிமையை பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் புறம்பானது என்பதைக் கருத்தில் கொண்டு, உலகெங்கும் ஜூன் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.  இந்த நாளில் நாம் அனைவரும் நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உறுதி ஏற்போம். தமிழகத்தை குழந்ததைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக