திங்கள், 20 ஜூன், 2011

6 மாதம் படகுச் சேவை தொடர்ந்தால் தூக்கிட்டு கொள்வாராம் சீமான்

சீமான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வாராம். 
ஆஹா  சுப காரிய சீகிரமஸ்து.
யாரோ பெற்றெடுத்த குழந்தைகளுக்கு எல்லாம்  விஷக்குப்பி வழங்கிவிட்டு தாங்கள் மட்டும் வெள்ளைக்கொடி ஏந்தி, வீரவசனம் எல்லாம் மறந்து சரணடைந்த கும்பலின் தமிழ் நாட்டு குண்டனிடம் இருந்து வேறு விதமான டயலாக்குகளை எதிர்பார்க்க முடியாதுதான். 
சீமான்  பிறரை தற்கொலை செய்து கொள்ள தூண்டுவார் 
ஆனால் தான் கவனமாக சினிமாவில் ஒரு கால் அரசியலில் ஒரு கால் வைத்துகொண்டு ஜோராக செழித்து கொளுப்பார். 
தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி
இலங்கை இந்திய கப்பலை சேவையை ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அரசு ஓட்டி காட்டட்டும், நான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்கி என் உயிரை விடுகிறேன் என நாம் தமிழர் கட்சி இணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி இணைப்பாளர் சீமான் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. எந்த தமிழன் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டுமென்று கேட்டான். வீம்பிற்காக காங்கிரஸ் அரசு சில காலத்திற்கு அந்த கப்பலை ஓட்டுவிட்டு பின்னர் நிறுத்திவிடும்.

தொடர்ந்து இந்த கப்பலை ஒரு ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அரசு ஓட்டி காட்டட்டும். நான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்கி என் உயிரை விடுகிறேன். என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக