திங்கள், 20 ஜூன், 2011

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சென்ற காரில் 35 லட்சம் சிக்கியது


ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் சிலமாந்தூர் போலீஸ் நிலைய சரகத்தில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஓடிகொண்டா சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது, காரின் உள்ளே ஒரு பையில் ரூ.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கார் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் சத்யசாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
கார் டிரைவர் ஹரீஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையில் பிடிபட்ட பணமானது,

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சத்யசாய்பாபாவின் தனிப்பட்ட அறையான யஜுர் மந்திரில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக