செவ்வாய், 16 நவம்பர், 2010

அழகிரி மகன் திருமணம்: மன்மோகன், சோனியா பங்கேற்பு?

டெல்லி: முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனுமான துரை தயாநிதியின் திருமண நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.

துரை தயாநிதிக்கும், மூத்த வழக்கறிஞர் சீதாராமன் மகள் அனுஷாவுக்கும் வரும் 18ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் திருமணம் நடக்கிறது.

முன்னதாக நாளை இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நாளை மதியம் விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

மகன் திருமணத்துக்கு வருமாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு அழகிரி கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தார்.

இந் நிலையில் நாளை மறுதினம் நடக்கும் திருமணத்திலோ அல்லது நாளை நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலோ பிரதமரும் சோனியாவும் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராசா ராஜிநாமா செய்துள்ள நிலையில் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு பிரதமரும் சோனியாவும் வருகை தருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையப் போவது போல சில அதிமுக ஆதரவு மீடியாக்களும் அதிமுக ஆதரவு காங்கிரஸ் பிரமுகர்கள்
பதிவு செய்தது: 16 Nov 2010 7:11 pm
ஐயோ எங்களுக்கு மந்திரம் ஓதி நோகாம நோம்பு கும்பிட்டு சாப்பிட ஒரு கலியாணம் போகுதே...இவாளெல்லாம் திருந்திட்டா நம்ம இனிமே உழச்சுதான் சாப்பிடனும் போல!!

பதிவு செய்தவர்: திவ்யா
பதிவு செய்தது: 16 Nov 2010 7:07 pm
அதிமுக ஆதரவு மீடியா எது????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக