யாழ் பலாலி வீதியில் இன்று யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதரகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா நாடாவை வெட்டி திறந்து வைத்ததுடன் பெயர் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போது இந்திய இலங்கை நாடுகளுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் இத்தூதரக திறப்பின் ஊடாகவும் மேம்படுத்திக் கொள்ளப்படும் என்றும் குறிப்பாக வடபகுதி மக்களுக்கான மேம்பாட்டில் அதிக கரிசனையுடன் இந்தியா செயற்படும் என்றும் தெரிவித்தார்.