சனி, 9 மே, 2020

திமுக சார்பில் கொரோனா நிவாரணம்

 தினகரன : காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கருப்படிதட்டடை, பருத்திகுளம் ஆகிய பகுதிகளில் சுமார் 1200 குடும்பங்களுக்கு திமுக சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த பருத்திகுளம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன் (எ) அன்பில் பொன்னா தலைமை தாங்கி ஏழை, எளியோருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கினார். பின்னர் பருத்திகுளம், கருப்படிதட்டிடை பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முரளிதரன், கோபால், சேகர், மணி, பி.அறிவழகன், எஸ்.அறிவழகன், அனல் அரசு, சதீஷ்குமார், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக