ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

போலீசை எதிர்த்து மலையக தமிழரின் உடலை சுமந்த சிங்கள அமைச்சர் தேவார பெருமா வீடியோ


Jeevan Prasad : இறந்த தோட்ட தமிழ் கங்காணியாரின் உடலை புதைக்க செய்ய விடாது தடுத்த போலீசாரை எதிர்த்து போராடிய சிங்கள அரசியல்வாதியான பிரதி அமைச்சர் தெவரப்பெரும!
அப்பாவியின் சடலத்தை தகனம் செய்ய இடம் கொடுக்காத விலங்குகள் மத்தியில் பாலித்த நீங்கள் ஒரு உண்மையான வீரன்..! (Video)
(லங்காஈநியூஸ் 2019 ஆகஸ்ட் 23 பிற்பகல் 03.45) மத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் தனது வாழ்நாள் முழுவதும் தோட்டத்தின் முன்னேற்றத்துக்காக இரத்தம் வியர்வை சிந்தி உழைத்து தோட்டத்தில் வசித்து வந்த 70 வயதான தமிழ் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த பின்னர் அந்தத் தோட்டத்தில் இருந்த மயானத்தில் குறித்த சடலத்தை தகனம் செய்வதற்கு தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிசார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றதோடு அதையும் மீறி குறித்த உடலை தோட்டத்துள் தகனம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து செய்வதறியாது தவித்த உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர். அதனையடுத்து உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் மக்களுடைய அச்சத்தைப் போக்கி அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் சென்றுள்ளார்.
இந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பில் பிரதியமைச்சரை அறிவுறுத்தியதுடன் அதனை பொருட்படுத்தாத பிரதியமைச்சர் சடலத்தை மயானம் வரை எடுத்துச் சென்று போலீசாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இறுதி சடங்குகளை செய்ய உதவினார். அதன்பின்னர் போலீசாரின் செயற்பாடுகளுக்கு பயந்த பொதுமக்கள் முகத்தை மூடிக்கொண்டு அடையாள அணிவகுப்பில் கண்டுபிடிக்காத வண்ணம் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். இந்த செயலானது மிகவும் கவலைக்குரிய சம்பவமாக அமைந்தது.
இந்த மயானமானது 1979-ஆம் ஆண்டு தொடக்கம் இருந்து வருவதாகவும் இதிலேயே குறித்த தோட்டத்தினுடைய மக்கள் சடலங்களை புதைத்து வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இங்கு மேலும் சடலங்கள் புதைக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த சடலத்தை புதைக்கும் நிகழ்வின்போது வருகை தந்திருந்த பொலிஸாரிடம் பிரதியமைச்சர் உயிரிழந்த நபரின் மரண சான்றிதழையும் ஒப்படைத்தார். இதன்பின்னர் குறித்த இடத்திலிருந்து விலகிச் சென்ற போலீசார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அப்பாவி தோட்ட தமிழ் மக்களுக்கு சிங்களவர் ஒருவரின் மயானத்தில் சடலத்தை புதைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் தான் சட்டத்திற்கு இணங்க செயற்பட்டதாகவும் ஏதேனும் தண்டனைகள் வழங்கப்பட்டால் அப்பாவி மக்களுக்கு அல்லாமல் தனக்கு வழங்குமாறும் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சடலம் ஒன்றை புதைப்பதற்கு காணி ஒன்று வழங்காத மிருக மனித இனத்திற்கு மத்தியில் பாலித்த தெவரப்பெரும நீங்கள் ஒரு உண்மையான வீரனே..!
காணொளி - இந்துவில் கெலும் ஜெயவீர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக