திங்கள், 29 ஜூலை, 2019

செத்தது சமூக நீதி.. அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!

துக்கச் செய்தி! மரண அறிவிப்பு! செத்தது சமூக நீதி!
அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!
42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கு வேலை.
STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 cut-off!
இந்திய அஞ்சல் துறை அரிய வகை ஏழைகளை அன்புடன் அழைக்கிறது!
அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள்.
Cut-off விவரம் (Out of 100):
EWS என்னும் உயர் சாதியினர்: 42
ST: 89.6
SC: 94.8
OBC: 95
UR என்னும் பொதுப் போட்டி: 95.2
உயர் சாதிக்கு 42 தான் cut-off என்னும் அடிப்படையில் 453 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள்.
யார் இந்த அரிய வகை ஏழைகள்?
* பிறப்பால் உயர் சாதியினர் மட்டும் (ஐயர், ஐயங்கார் போன்றோர்)
* ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ளோர்
* 5 ஏக்கர் நிலம் உள்ளோர்
* 1000 சதுர அடி வீடு உள்ளோர்.
இவர்கள் சம்பளம் 12,000/- ரூபாய் முதல் 35,480/ வரை. சொந்த ஊரில் மத்திய அரசு வேலை!
PhD படித்தவர்கள் எல்லாம் குப்பை அள்ளும் வேலைக்கும் பியூன் வேலைக்கும் விண்ணப்பிக்கும் காலத்தில் இது கசக்குமா?
தகுதி: பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்
தேர்வு: தேர்வு ஏதும் இல்லை. பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு.
SBI மதிப்பெண்களாவது முதல் நிலைத் தேர்வு மதிப்பெண்கள்.
அஞ்சல் துறையோ வேலையே கொடுத்து விட்டது!
இதுவாவது பரவாயில்லை.

மாற்றுத்திறனாளிகள் Cut-off விவரம் (Out of 100)
PH-HH என்னும் செவித் திறன் சிக்கல் உள்ளோர்: 64.2
PH-OTR என்னும் வேறு உடல் திறன் சிக்கல் உள்ளோர்: 78.4
PH-VH என்னும் பார்வைத் திறன் சிக்கல் உள்ளோர்: 85.8
PH-OH என்னும் கை, கால் முடக்கம் போன்ற சிக்கல் உள்ளோர்: 88.8
பார்வைத் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 85.8
ST மக்களுக்கு 89.6
95.2 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற OBC மக்கள் மட்டும் 1944 பேர்!
அப்படி என்றால் 42 முதல் 95.2 மதிப்பெண்ணுக்குள் எத்தனையோ கோடி தகுதியான SC, ST,
OBC மக்கள் இருப்பார்கள்!
அவர்களை எல்லாம் விட்டு விட்டு 453 அரிய வகை ஏழைகளைத் தேடி வேலை தந்துள்ளார்கள்.
நம் பிள்ளைகள் சமச்சீர் கல்வியில் படித்து 500க்கு 450 மேல் வாங்கினால் மனப்பாடம் செய்கிறோம், மாநிலக் கல்வி தரம் இல்லை என்கிறார்கள்.
ஆனால், இவர்கள் வேலை கொடுத்துள்ள 42% என்பது என்ன?
500க்கு 210 மதிப்பெண்கள்!
இத்தனை ஆயிரம் பேர் முழுத் தகுதியோடு முட்டி மோதும் போது பத்தாம் வகுப்பில் 500க்கு 210 மதிப்பெண்ணுடைய மக்கு பிளாஸ்திரிகளுக்கு வேலை கொடுத்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்!
உயர் சாதியினராகப் பிறந்தாலே போதும்!
இந்திய அரசு இப்படிப்பட்ட அரிய வகை ஏழைகளை வீடு வீடாகத் தேடிப் போய் வேலையை வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுத்திருக்கிறது என்று அர்த்தம்!
இட ஒதுக்கீடு இல்லாமல் பொதுப்போட்டியிலேயே 1136 பேர். இது 25%.
எனவே தான், முன்னேறிய சாதிகளுக்கு அவர்கள் மக்கள் தொகையை ஒப்பிட ஏற்கனவே போதுமான வாய்ப்புகள் உள்ளன. தனியாக இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறோம்.
இது பத்தாது என்று EWS மூலம் இன்னும் 10%. ஆக, 3% மக்கள் 35% வேலை வாய்ப்புகளைக் கொள்ளை அடித்துக் கொண்டு போக, 97% மக்கள் 65% இடங்களுக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
இதே பொதுப்போட்டியிலேயே 800 OBCக்கள், 4 STக்கள், 64 SCக்கள் இடம் பிடித்துள்ளார்கள். முதல் மதிப்பெண் 99.8 எடுத்தவர் ஒரு OBC.
ஆக, இத்தனை நாள் தகுதி இல்லாமல் மற்றவர்கள் இடங்களை அள்ளிப் போகிறார்கள் என்று வைத்த குற்றச்சாட்டு பல் இளிக்கிறது அல்லவா?
இப்போது 42 மதிப்பெண்கள் பெற்று தகுதியே இல்லாமல் இடங்களைத் திருடிப் போவது யார் என்று புரிகிறதா?
*****
தரவு ஆய்வு மற்றும் படமாக்கல் உதவிக்கு நன்றி - Ashok Kumar, Sathya Narayanan, Surendar Sekar
ஆய்வு வெளியீடு - Ravishankar Ayyakkannu மற்றும் திராவிட ஆய்வுக் குழு நண்பர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக