/tamil.oneindia.com-hemavandhana.:
சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பேசி வருவதைப் பார்த்தால்,
உண்மையிலேயே இந்த ஆட்சி கவிழ போகிறதா? அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்ற
கேள்வி எழுகிறது.இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்று சமீப காலமாகவே ஸ்டாலின் சொல்லி வருகிறார். அதுவும் தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்கிறார்.
நேற்றுகூட மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணியின் படத்தை, திமுக தலைவர் முக ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார். அப்போது, "சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தாமல் விட்டிருப்பது, புலி பதுங்குவது என்பது, பாய்வதற்காக தான், ஓடி ஒளிவதற்காக அல்ல" என்று தெரிவித்துள்ளார். ஸ்டாலின் இப்படி சொல்ல காரணம் என்ன? தேர்தல் பிரச்சார சமயங்களில் வாக்குகளை பெற இப்படி பேசலாம்.. பேசியும் இருக்கிறார். இன்னும் ஒன்றரை வருட ஆட்சி இருக்கும்நிலையில், எந்த தைரியத்தில் ஸ்டாலின் இப்படி கூறுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது.
தங்க தமிழ்செல்வன்
அதிமுக நிர்வாகிகள்
அடி போடுகிறதா
உதயநிதி பேச்சு
அப்படியானால் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டு வந்து அதை நிறைவேற்றத் தேவையான அளவுக்கு அதிமுக தரப்பில் வாக்குகளை அதாவது எம்எல்ஏக்கள் ஆதரவை திமுக திரட்டி விட்டதா? அப்படி பெற்றுவிட்டால் அது டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களா? அல்லது அதிருப்தி எம்எல்ஏக்களா? விலைபோகும் எம்எல்ஏக்களா? .. நிறைய கேள்விகள் எழுகின்றன.. ஆனால் விடைதான் தெரியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக