ஞாயிறு, 31 மார்ச், 2019

நடிகர் ராஜ்கிரண் : 5 வருட அவலங்களை நினைவில் கொண்டு வாக்களியுங்கள் மக்களே!

Raj Kiran Raj :இப்பொழுது நடக்கவிருப்பது, பாராளுமன்றத்திற்கான, பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்.
இதை, வாக்காளர்கள் நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தோமா - வாழவில்லையா ?
இந்த ஒற்றைக்கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குத்தாங்களே கேட்டுக்கொண்டு இந்தப்பிரதமர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடரலாமா - கூடாதா ? இதை மட்டுமே முடிவு பண்ணி வாக்களிக்க வேண்டிய தேர்தல் இது.
இந்த சூழலில், அ.ம.மு.க, நாம் தமிழர், மக்கள் நீதி மைய்யம் போன்ற, தமிழகத்தை ஆள விரும்பும், ஆளத்தகுதிவாய்ந்த கட்சிகள், தனித்தனியே பிரிந்து நின்று, வாக்குகளை பிரிப்பது, தற்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவே அமையும். இந்த நிதர்சனத்தை, எல்லோரும் உணர்ந்து கொள்வது, எல்லோருக்குமே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக