![]() |
| டிஜிபி குட்கா ராஜேந்திரன் |
மாலைமலர் :குட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச
ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையை ஏற்று சி.பி.ஐ. வழக்குப் பதிவு
செய்துள்ளது.
சென்னை:![]() |
| குட்கா அமைச்சர் நத்தம் விசுவநாதன் |
முதற்கட்டமாக குட்கா ஊழல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கியது. அதனை ஆய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாநில
லஞ்ச ஒழிப்புத் துறையினர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக 17
கீழ்மட்ட அதிகாரிகள் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் பதிவு
செய்திருந்தது. தற்போது அவர்களின் பெயர்கள் சி.பி.ஐ.யின் முதல் தகவல்
அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அடுத்தகட்டமாக,
குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் அதிகாரிகளின் பெயர்களை முதல் தகவல்
அறிக்கையில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக