சனி, 12 மே, 2018

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

மாலைமலர் :கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் என இன்றைய வாக்குப்பதிவுக்கு
பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. #KarnatakaElection #ExitPolls #congressparty
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைக்கு உட்பட்ட 222 தொகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தியாவின் பிரபல ஊடகங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. அதன்படி, ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஓரிரு ஊடகங்களின் கருத்து கணிப்பின்படி அங்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையலாம் என குறிப்பிடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக