நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலைப்பஸ்வாமி சிலை, கல்யாணோற்சவத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. கல்யாணோற்சவம் முடிந்த பின் சிலைகள் மீண்டும் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, பூதேவி சிலை, அர்ச்சகர் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து, சிலையின் கிரீடம் சேதமடைந்தது.
இதைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள், சிலையை தனியே எடுத்துச் சென்று, சிலைக்கு சாந்தி ஹோமம், புன்னியாவசனம் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரியாமல் நடத்தி உள்ளனர். இந்த தகவல்கள், நேற்று காலை தாமதமாக வெளிவந்துள்ளன. ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் யாரும், இதற்கு விளக்கமளிக்க முன்வரவில்லை. இது குறித்து, வெளியில் தெரிவிக்காமல் தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது.
'திருமலை தேவஸ்தானம், வயதான அர்ச்சகர்களை பணியில் நியமிக்கும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. 'அதனால், அர்ச்சகர்களின் வயதுக்கேற்ப, அவர்களுக்கு பணிகளை வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், இது போன்ற சங்கடங்கள் தவிர்க்கப்படும்' என, பக்தர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக