ஞாயிறு, 21 ஜனவரி, 2018

மோடிக்கே பீச்சே கியா ஹே மோடி கே பீச்சே *** மோடிக்கு பின்னால் முழு பார்பனர்களும்

Ravi Raj:  மோடியின் பின் யார் இருக்கிறார்கள் என்றால் முழு பிராமண சமுதாயமும் நின்று அவரை முட்டுக்கொடுக்கிறது. காங்கிரஸ், திமுக, கம்யுனிஸ்ட் அதிமுக என்றால் எல்லாக்கட்சியினரும் இருப்பார்கள் ஆனால் இந்த பிராமண ஜனதா பார்ட்டியில் மட்டும் பெரும்பகுதி அவாள்களாகவே இருப்பார்கள். தொலைக்காட்சியில்கூட, கே.டி ,ராகவன், நாராயணன், சுப்பிரமணி, சிப் விஞ்ஞானி எஸ்.வி.சேகர், இவங்கதான் பெரிய அறிவாளி மாதிரி கம்புசுத்துவாங்க. இங்கேதான் ஒரு சூட்சமம் இருக்கிறது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தங்களைத்தாங்களே அறிவாளி சமுதாயம் என்று பறைசாட்டிக்கொண்டு மற்றவர்களெல்லாம் சரஸ்வதியின் நிழல் படாதவர்களாகவே ஆக்கி வைத்திருந்தார்கள். ஒரு சிலர் தப்பித்தவறி பேசிவிட்டாலும் அவர்களுக்கு ஆண்டவன் வழி தண்டனையை கொடுத்து அடக்கினார்கள், ஏகலைவன் முதல் சம்பூகன்வரை இதே நிலைதான். இப்படிதங்களை அறிவாளியாக காட்டிக்கொண்டவர்களுக்கு வடக்கில் ஒருத்தரும் (அம்பேத்கார்) தெற்கில் ஒருத்தரும் (பெரியார்)ஆப்பை சீவி அடித்தபின்பு இவர்கள் இல்லாத ஆட்சி இங்கே நிறுவ முடிந்தது. இது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலை தந்தது அவர்கள் மற்றவர்களை மட்டம் தட்ட எண்ணினார்கள்.

இவாளுக்கெல்லாம் எங்கே ஒழுங்கா ஆட்சி செய்ய தெரியும், சும்மா தத்து பித்துன்னு கத்திக்கிட்டிருந்தா வெளங்கிடும்ன்னு ஆரம்பிச்சவர்கள் சூத்திரால்களின் ஆட்சி (காமராஜர், அண்ணா கலைஞரின் ஆட்சி) இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணமாக திகழ ஆரம்பித்தவுடன் ''ராஜாஜி'' ஆட்சி ராவோட போச்சுன்னு கதற ஆரம்பித்தார்கள் பெரியாரின் வாரிசுகளானா காமராஜரும் , அண்ணாவும், கலைஞரும் நாளுக்கு நாள் மிளிறவும், இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை நாம் இல்லேன்னா நாட்டை ஒன்னும் செய்யமுடியாதுன்னு நெனச்சோம் இப்ப என்னடான்னா பறையன், பள்ளன் பதினெட்டு ஜாதிகாரப்பயலுவளும் டாக்ட்டருங்குறான், வக்கீலுங்குறான் கலெக்ட்டருங்குரன் இப்படி எல்லாத்துறையிலும் உச்சத்துல ஏறி நின்னு எக்ஸ்க்கியூஸ்மீ ன்னு நக்கல் பண்ணுறாநுங்கை இவாளையெல்லாம் அடக்கி நாம்தான் பெரிய அப்பாடக்கருன்னு காட்ட நினைச்சி மோடியை முன்னாடி விட்டு இவாளெல்லாம் முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாவம் இவா சொல்லுற எல்லாதிட்டமும் தோத்துப்போயி அது மோடி தலையில வந்து விழுது.
மயிலாப்பூர் பழைய மாமா பாடையில போனதும் புது மாமா சும்மா சுறுசுறுப்பாய் வெத்திலை பெட்டியுடன் வந்து எடுபுடி பழனிசாமி பன்னீர் பகவான் ரெண்டுபேரையும் கோத்துவிட்டு வேடிக்கைபார்த்தார். சேர்க்கை பலன் தரவில்லை, என்னமோ இவர் பெரிய பிம்பிளிக்கி பிளாப்பி மாதிரி தொலைக்காட்சிளெல்லாம் வந்து பேசினார். மாமா வின் தொழில் எடுபடவில்லை மாமா ஆடிட்டார், எச்சகல பையனையும் கேக்குவெட்டி கெங்கவல்லியையும் விட்டு திரைப்படத்தை திட்டவிட்டார் பாவம் அதுங்க வாயை மட்டுமல்லாமல் எல்லாத்த்தையும் புண்ணாக்கிக்கொண்டு மெர்சலாகி நிக்கிது. பாவம் அந்த பையன் முன்னுறு வோட்டு தேர்தலில் முகத்தில் கறியை பூசிக்கொண்டு வந்த ஒரே வாரத்துல இப்படி பண்ணுனா எப்புடி...
இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா ''மோடிக்கே பீச்சே கியா ஹே மோடி கே பீச்சே'' வாக இருக்குற அத்துணை கிராஷ் பெல்ட்டும் அரைவேக்காடுன்னு தெரிஞ்சிடுச்சி, டிமானிடைசேஷன் முதல் ஜி.எஸ்.டி வரை புட்டுக்கிச்சி, திட்டம் நட்டுக்கிச்சி அவங்க கட்சிக்காரர்களே ஜி.எஸ்.டி கோட்டை அழிச்சிப்புட்டு ஆரம்பத்துலேர்ந்து போடணும்னு புரோட்டா சூரி மாதிரி பேச ஆரம்பிச்சுடானுங்க
இனிமேலும் சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சிதான் மோடியை கோபாலபுரத்தில் உள்ள சாமியின் காலில் விழுந்து கதற சொல்லிடானுங்க.. சூரிய நமஸ்காரம் நல்லதுன்னு சொல்லியே மோடியின் பீச்சே நின்னு கியஹே கியாஹே ன்னு கத்துறானுங்க.. பாவம் காத்துப்போன பலூன் திசை தெரியாமல் விழுந்து நொருங்கிக்கொண்டிருக்கிறது ... மோடிக்கே பீச்சே கும்பல் பலூனை தூர எரிய முடிவு செய்துவிட்டதுபோலவே தெரிகிறது... மெர்சலின் அப்பா பாடிய பாட்டுதான் ஞபாகத்து வருது .... ஆடாதடா ஆடாதடா மனித ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக