செவ்வாய், 5 செப்டம்பர், 2017

இலங்கையில் இருந்து 76 மீனவர்கள் இந்திய கடல்படையினரிடம் ஒப்படைப்பு! காரைக்கால் வந்தனர்.

தமிழகத்தில் ராமநாபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 76 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ; இவர்கள் அனைவரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய, இலங்கை அரசு சட்டத் துறைக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மற்றும் ஊர்க்காவல் துறை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்கள் 76 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து அவர்கள் அனைவரும் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இன்று இரவு தாயகம் திரும்பினர். காரைக்கால் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த அவர்களை, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்துச் சென்றனர். தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக