![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEojpTWxjVZ_r29oEQ2LP9bx33YqRq0Z7OxzfIKS3FYr02zSAWt2-G6D3gZ5T3-b7V14O7TIgCXBo9tViseGuDB3KL0Tp2d1vrck-T49OZDIxxTPq3lRHnrhC2KMbaZ2DzIoFVSBmp9p0/s280/3-25.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEsXkQbevUtCTu9IWiDPR6qfw6A5sAowKX3yjSxcy7t4Yv_JHQT8aUfoSV3tnGUUoNRn2rowrPjXcokjxVQciyDmWXQOAU2gm7Lf7KE0LpPqRkbXWygBHE5UV4pVjOMD5C_uHKpQFiJhE/s280/wp-1502888909763.png)
கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி
சோபிக்காவை என்டனி தாக்கியுள்ளார். அதன் பின்னர் சோபிக்கா என்டனியுடனான
உறவை துண்டித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து என்டனி நீண்ட கத்தியால்
சோப்பிக்காவின் தலை, கழுத்து மற்றும் மார்பகங்களில் குத்தி கொலை
செய்துள்ளார். 22 தடவைகள் சோபிக்காவை என்டனி கத்தியால் குத்தியுள்ளதாக
வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தெரு ஒன்றில் என்டனி ஒரு பெரிய சூட்கேஸில்
சோபிக்காவின் சடலத்தை மறைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர்
தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பி சென்று இரண்டு
நாட்களின் பின்னர் சுவிட்ஸர்லாந்தில் வைத்து பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மன்
பத்திரிகை தகவல்களுக்கமைய இந்த கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனது
மகள், என்டனியினால் அச்சுறுத்தப்பட்டதாக சோபிக்காவின் தந்தை சிவசாம்போ
தெரிவித்துள்ளார்.
என்டனி மற்றும் சோபிக்க ஜோடி 2016 ஆம்
ஆண்டு ஜேர்மனியில் அஹோஸ் நகரில் உள்ளூர் அகதிகள் இல்லத்தில்
சந்தித்துள்ளனர். அங்கு என்டனி வாழ்ந்து வந்துள்ளார். சோபிக்கா அங்கு
தன்னார்வ தொண்டு செய்து வந்துள்ளார்.
இத்தாலியில் மூன்று ஆண்டுகள் வாழ்த்துள்ள நிலையில் 2015 ஆம் ஆண்டில் என்டனி ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதனால் 2012
இல் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும்,
நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத குழுவான போகோ ஹராமுக்கு எதிராக
தான் போராடியதாகவும், என்டனி தனது புகலிட கோரிக்கை விண்ணப்பத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் போலியான தகவல்களை குறிப்பிட்ட காரணத்தினால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி அன்று அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சோபிக்கா ஒரு சிறந்த பெண்ணாக
காணப்பட்டுள்ளார். தனது பிறந்த நாள் அன்று இலங்கையில் வாழும் வீடற்ற
மக்களுக்கு உதவி பொருட்களை அவர் அனுப்பி வைத்ததாக சோப்பிக்காவின்
வழக்கறிஞர் Hans-Peter Maas தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்துடன் இலங்கையிலிருந்து
ஜேர்மனிக்குச் சென்றிருந்த சோபிக்கா பல வருடங்களாக அஹோஸ் நகரில் வசித்து
வந்துள்ளார். குழந்தைகளுடன் வேலை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு
காணப்பட்டதாகவும் ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. இலக்கிய இன்போ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக