ஞாயிறு, 9 ஜூலை, 2017

1189 காளைகளுடன் நடந்த ஜல்லிகட்டு (படங்கள்) புதுக்கோட்டை வாராப்பூர் கிராமத்தில் ..

தமிழகத்திலேயே அதிகமாக ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டம்
புதுக்கோட்டை. சுமார் 300 இடங்களில் ஜல்லிகட்டு போட்டிகள் நடக்கும். இந்த நிலையில் ஆலங்கடி அருகில் உள்ள வாராப்பூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1189 காளைகள் பங்கேற்றது. சுமார் 300 வீரர்கள் களமிறங்கி காளைகளை அடக்கினார்கள். பல காளைகள் வீரர்களின் கைகளுக்கு பிடிகொடுக்காமல் சீறிப்பாய்ந்து சென்றது. இந்த போட்டியில் சுமார் 90 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 12 பேர் அதிகமாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-இரா.பகத்சிங். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக