ஞாயிறு, 11 ஜூன், 2017

ரூபா கங்கூலி பாஜக எம்பி தாராபுரம் கோவிலில் சாமி ஆடினார் Actress Roopa Ganguly BJP -MP dancing in tamilnadu temple


திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திற்கு மேற்கு வங்க மாநில பா.ஜ., எம்.பி.யும், நடிகையுமான ரூபா கங்குலி நேற்று சென்றிருந்தார்.
மூலனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தாரை, தப்பட்டை மற்றும் பறை இசைக்கப்பட்டது. பறை இசையை கேட்ட எம்.பி. ரூபா திடீரென ஆட ஆரம்பித்துவிட்டார்.
சாமி வந்தது போலவும், கும்பிட்டபடியும் அவர் நடனமாட, இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள், உற்சாகமடைந்தனர். அவர்களும், உற்சாகமாக குரல் எழுப்பியபடி, நடனமாட துவங்கினர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், சாமியை தரிசித்துவிட்டு சென்றார்.
பறையின் இசைக்கு ஆடினாரா அல்லது சாமி வந்து ஆடினாரா என்று அங்கிருந்தவர்கள் ரகசியமாக கேட்டுக்கொண்டது காதுகளில் விழுந்தது  லவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக