ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

பன்னீர்செல்வம் ராஜினாமா ... சசிகலா சட்டமன்ற குழு தலைவராக தெரிவு !

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் வித்தியாசாகர் ராவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.  அக்கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக நான் ராஜினாமா செய்கிறேன்.   ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு அமைச்சரவையை கலைக்கும்படி ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.;முன்னதாக இன்று மதியம் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை அடுத்து தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் கடிதம் கொடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால், சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக