புதன், 15 பிப்ரவரி, 2017

ஸ்டாலினை முதல்வர் ஆக்குகிறார் பன்னீர் : எடப்பாடி ஒப்பாரி! எல்லாமே ஊகசெய்திகளே ?

தள்ளாத வயதிலும் தளராத ஊக்கம் ! நடுங்கும் கரங்களிலும் துடிக்கும் வேகம்! பேசவே சிரமப்பட்டாலும் மௌனமே பேசும் என்று காட்டிய தீரம்?  
இன்று அரசியல்வாதிகளுக்கு மிகவும் முக்கியமான நாள். ஆளுநர் இன்று வாய் திறந்து யாரைவாது ஆட்சி அமைக்க சொல்லியே ஆகவேண்டும். ஒரு வேளை அப்படி ஆளுநர் வாய் திறந்தால் என்னெல்லாம் நடக்கும்..? 1)ஓ.பி.எஸ் கருத்தை நிராகரித்து,அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கலாம்.அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறும் பட்சத்தில் ஆட்சியை கலைக்கலாம். 2)சட்டமன்றத்தை கூட்டி ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரலாம். இந்த வாக்கெடுப்பை வெளிப்படையான வாக்கெடுப்பாகவோ அல்லது ரகசிய வாக்கெடுப்பாகவோ நடத்த ஆளுநர் உத்தரவிடலாம். ஒருவேளை எடப்பாடி ஆட்சி அமைப்பது உறுதியானால் பன்னீர் தனது ஆதரவு உறுப்பினர்களை கூட்டிக் கொண்டு போய் ஸ்டாலினிடம் ஒப்படைத்து விடுவார். அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டதாக கூறுகிறார்கள். திமுக உறுப்பினர்கள் சென்னை வருகிறார்கள். பார்க்கலாம் முதல்வர் ஸ்டாலினா, பன்னீரா, எடப்பாடியா என்று..?  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக