திங்கள், 13 பிப்ரவரி, 2017

கூவத்தூரில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அடி - டாக்டர் சிகிச்சை! செய்யாறு எம் எல் எல் ஏக்கு டாக்டர் சீகிச்சை


கூவத்தூரில் முதல் நாள் , 3.48 மணிக்கும், இரண்டாம் நாள் 5.00 மணிக்கும் 3ம் நாளான இன்று மாலை 5.45 மணிக்கும் சசிகலா வந்திருக்கிறார். இன்று இரவு எம்.எல்.ஏக்களோடு தங்கும் ஏற்பாடுகளோடு தான் சசிகலா வந்திருக்கிறார் என்கிறார்கள். எம்.எல்.ஏக்கள் இங்கே கடந்த 6 நாட்களாக கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏக்களுக்கு பல வகையான உணவுகளும், சிற்றுண்டிகளும் மற்றும் டான்ஸ், என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியிலே வைக்கப்பட்டிருந்தாலும், தகவல் தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் இல்லாமல் அங்கே பாதுகாப்புக்கு இருக்கும் செந்தில்பாலாஜி, ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் ஆகியோர் அவர்களிடம் சசிகலாவுக்கு ஆதரவு தரும்படி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதால் சிலர் எரிச்சல் அடைந்ததாகவும் சொல்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகத் தான் செய்யாறு எம்.எல்.ஏ மோகன் சசிகலாவுக்கு எதிராக பேசியதாகவும், நான் எப்படியும் மாற்றித்தான் ஓட்டு போடுவேன் என்று முரண்டு பிடித்ததால். செம்மையாக கவனித்திருக்கிறார்கள்.
இது மற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. அதன் பிறகே முதல் உதவிக்கு ஆம்புலேன்ஸ், டாக்டர்களை வரவழைத்தி ருக்கிறார்கள். இதற்கு அடுத்த கட்டமாக தான் சசிகலா இரவு நட்சத்திர விடுதியில் தங்கும் ஏற்பாடுகளோடு வந்திருக்கிறார் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக